கேரளாவுடன் இணைவோம்.. குமரி மக்களின் முழக்கம்.. அதிர்ச்சியில் தமிழக அரசு!
Recommended Video

சென்னை: எங்களை மதிக்காத தமிழக அரசு எங்களுக்கு வேண்டாம். நாங்கள் கேரளாவுடன் இணைவோம் என்று கன்னியாகுமரி மாவட்ட மக்கள் முழங்கியுள்ளது தமிழக அரசை அதிர வைத்துள்ளது.
கேரளாவில் உள்ள இடதுசாரி அரசு மிகத் தீவிரமாக ஓகி புயல் பாதிப்பு மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் செயல்படும் விதம் ஒட்டுமொத்த இந்தியாவையும் கவர்ந்துள்ளது.
மீனவர்களை மீட்பதில் வேகம், கட்டுப்பாட்டு அறையில் போய் அமர்ந்து பணிகளை முடுக்கி விடுவது என பிரமாதப்படுத்தி வருகிறார் பினாராயி விஜயன். ஆனால் தமிழகத்தில் நிலைமை படு மோசமாக இருக்கிறது. தலைகீழாக உள்ளது. இங்கு முதல்வர் இதுவரை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரவில்லை.

மீனவ மக்களின் கொந்தளிப்பு
இது அந்த மாவட்ட மக்களை கடுமையாக கொந்தளிக்க வைத்துள்ளது. குழித்துறையில் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. முதல்வர், அமைச்சர்கள் வரும் வரை போராட்டம் தொடரும் என மக்கள் அறிவித்து விட்டனர்.

ஜல்லிக்கட்டை விட உயர்ந்தது
ஏழை எளிய மக்களின், மீனவ சமுதாயத்தினரின் இந்த எழுச்சி மிக்க போராட்டம் தமிழகத்தை அதிர வைத்துள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டத்தை விட இது மிகவும் உயர்ந்தது என்பதில் சந்தேகமே இல்லை. காரணம் இது மக்கள் தங்களுக்காக நடத்தி வரும் போராட்டம்.

தமிழக அரசுக்கு மிகப் பெரிய அவமானம்
அதை விட இந்தப் போராட்டத்தின் முக்கிய அதிர்ச்சி முழக்கமாக, நாங்கள் கேரளாவுடன் இணைவோம் என்று மீனவ மக்கள் கூறியுள்ளதுதான். இது தமிழக அரசுக்கு மிகப் பெரிய அவமானமாகும். தமிழக அரசு முற்றிலும் செயலிழந்து போயுள்ளது என்பதையே இது காட்டுவதாக உள்ளது.

அபாரமாக செயல்படும் கேரளா
மீனவர்களை மீட்கவும், நிவாரணப் பணிகளிலும் கேரள அரசு மிகப் பெரிய அளவில் அக்கறை காட்டுகிறது. தீவிரம் காட்டுகிறது. ஆனால் தமிழகத்தில் இதுவரை எந்த உருப்படியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குமரி மாவட்ட மீனவர்கள் குமுறியுள்ளனர். அடுத்த கட்டமாக குமரி மாவட்ட மீனவ கிராமங்களை கேரளாவுடன் இணைக்கக் கோரி நாங்கள் போராட்டத்தில் ஈடுபடப் போகிறோம் என்று அவர்கள் முழங்கியுள்ளது அனைவரையும் அதிர வைத்துள்ளது.
தமிழக அரசு உடனடியாக விழித்துக் கொள்ளாவிட்டால் மிகப் பெரிய மக்கள் புரட்சியை அது குமரியையும் தாண்டி எதிர்கொள்ள நேரிடலாம் என்பதே நிதர்சனம்.
-
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கோயம்பேடு வா.. தாம்பரம் காதலியிடம் இருந்து வந்த அழைப்பு.. காதலனுக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
மகளிர் உரிமை தொகை ரூ.2 ஆயிரம், ரூ.8,000 கூப்பன் வாக்குறுதிகள் என்னை கவர்ந்தது.. நடிகை ரோகிணி! -
முதல் கூட்டத்திலேயே வானதிக்கு நோஸ் கட்.. கோவையில் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக -
பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் எல்லோருக்கும்.. அடிக்குது மெகா ஜாக்பாட்.. தேடி வரும் பணம்.. எவ்வளவு? -
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
1988ல் "மக்கள் ஆணையிட்டால்" படத்தில்! விஜயகாந்துக்காக ஸ்டாலின் பாடிய பாடல் இதுதான்! -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன? -
வேட்பாளர் லிஸ்டில் பெயர் இல்லை.. அண்ணாமலை இன்று மாலையே முக்கிய மூவ்.. வியந்து போன வானதி.. அசத்தல்












Click it and Unblock the Notifications