கொடைக்கானல் கொண்டை ஊசி வளைவில் பகீர்.. தலைகுப்புற பள்ளத்தில் பாய்ந்த கர்நாடக பஸ்
கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப் பள்ளத்தில் கர்நாடகா பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் இருந்த பயணிகளை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கொடைக்கானல் மலை அடிவாரத்தில் இருந்து சிறிது தொலைவில் அமைந்திருக்கும் பகுதி டம்டம்பாறை. தேனி மாவட்டத்தில் உள்ள இந்தப் பகுதி புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. இந்த மலைப்பகுதிக்கு கர்நாடாகாவைச் சேர்ந்த பேருந்து ஒன்று 40 சுற்றுலா பயணிகளுடன் இன்று காலை வந்துக் கொண்டிருந்தது. பயணிகள் அனைவரும் பெங்களூரைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

காலை 11 மணியளவில் மலைப் பாதையில் உள்ள வளைவில் திரும்பும் போது பேருந்து நிலைத்தடுமாறி அங்கிருந்த 30 அடி பள்ளத்தில் செங்குத்தாக விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த பயணிகள் பலர் காயமடைந்தனர். பயணிகளின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர், உடனடியாக போலீஸாருக்கும், தீயணைப்புப் படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் அங்கு வந்த தீயணைப்புப் படையினர் கயிறு மூலம் பள்ளத்தில் இறங்கி பேருந்தின் கண்ணாடியை உடைத்து பயணிகளை மீட்டனர்.
அதிர்ஷ்டவசமாக, பள்ளத்தில் விழுந்த பேருந்து மேற்கொண்டு உருளாததால் பெரிய மலைப் பள்ளத்தில் விழுந்து பெரும் அசம்பாவிதம் ஏற்படுவது தவிர்க்கப்பட்டுள்ளதாக தீயணைப்புப் படையினர் தெரிவித்தனர். காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டனர். நல்வாய்ப்பாக, இந்த விபத்தில் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.
பொதுவாக ஊட்டி, கொடைக்கானல் ஆகியவை மலைப் பாதையில் அமையப்பெற்றுள்ளதால் இங்கு செல்லும் வாகனங்கள் மிகவும் எச்சரிக்கையாக செல்ல வேண்டியது அவசியம். குறிப்பாக, ஊட்டியை விட கொடைக்கானலுக்கு செல்லும் வழிதான் மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது. இங்கு 18-க்கும் மேற்பட்ட கொண்டை ஊசி வளைவுகள் இருப்பதாலும், செங்குத்தான மலை என்பதனாலும் கொடைக்கானலுக்கு செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குவது உண்டு. இதில் பல விபத்துகளில் ஏராளமானோர் பலியாகியும் உள்ளனர். இவ்வாறு விபத்துக்குள்ளாகும் வாகனங்களில் பேருந்துகளும், லாரிகளும் தான் அதிகம். ஏனெனில், பேருந்துகள் பெரிதாக இருப்பதால் கொண்டை ஊசி வளைவில் செல்வது கடினம் ஆகும். எனவே, கொடைக்கானலுக்கு இயக்கப்படும் பேருந்துகளுக்கு அனுபவம் வாய்ந்த ஓட்டுநர்களே அமர்த்தப்படுவார்கள்.
-
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
டி.கே.சிவக்குமார் Vs சித்தராமையா.. சர்ப்ரைஸ் என்ட்ரியாக வரும் கார்கே.. கர்நாடகாவில் அரசியல் சுனாமி! -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
"தமிழகம் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்!" மேகதாது விவகாரத்தில்.. வாயை விட்ட டிகே சிவக்குமார் -
பெங்களூரில் புகுந்த உயிரை பறிக்கும் எபோலா? உகாண்டாவில் இருந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.. திக்திக் -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு












Click it and Unblock the Notifications