என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புக்களே.. மீண்டும் எப்போது கேட்கும் இந்தக் குரல்?
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி என்றதுமே எத்தனையோ விஷயங்கள் நம் கண் முன்பு நிழலாடினாலும், அவரது என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளே என்ற அந்த அன்பு விளியை மறக்க முடியுமா!
கடந்த சட்டசபைத் தேர்தலின்போது அதாவது 2016ம் ஆண்டு திமுகதலைவர் கருணாநிதி வித்தியாசமான முறையில் பிரசாரம் மேற்கொண்டார். அதாவது மிஸ்டு கால் கொடுத்தால் அவரது குரல் நம்மைத் தேடி வந்தது. அந்த கரகரப்பான குரலில் என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புக்களே என்று அவர் பேசி வாக்கு சேகரித்தார்.
என் அன்பு உடன்பிறப்புக்களே வணக்கம். தமிழக மக்களின் நலன்காக்க அயராது பாடுபடும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவு நல்கும் மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். ஐந்தாண்டு கால இருள் விலகி தமிழகம் வளர்ச்சி பாதையில் நடை போட வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிப்பீர்" என்று நீண்டது அந்த பிரசாரம்..
மீண்டும் அந்த உதயசூரியன் எப்போது எழுந்து வந்து தனது கம்பீரக் குரலால் நம் மீது அன்பு ஒளியைப் பாய்ச்சாதா என்ற ஏக்கத்தில் காத்திருக்கிறார்கள் திமுகவினர்.
கருணாநிதியின் 2016 பிரசாரக் குரல். உங்களுக்காக மீண்டும்: