காவேரி மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் கருணாநிதி... மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணிப்பு
Recommended Video
சென்னை: இன்று நள்ளிரவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை மிகவும் மோசமானதால் அவர் ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ரத்த அழுத்தம் மிகவும் குறைந்துவிட்டதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள கருணாநிதியின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததாக முதலில் தெரிவிக்கப்பட்டது.
கருணாநிதிக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கோபாலபுரம் வீட்டுக்கு வந்தார். கருணாநிதியின் தனி மருத்துவர் கோபால் மற்றும் காவேரி மருத்துவமனையின் மருத்துவக் குழுவினரும் வந்தனர். அவரை சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டதையடுத்து அங்கிருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது.
#WATCH: DMK president M. Karunanidhi being taken to Chennai's Kauvery Hospital.#TamilNadu pic.twitter.com/uJ06YHOU5B
— ANI (@ANI) July 27, 2018
மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட கருணாநிதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு உடனடி சிகிச்சையின் பலனாக கருணாநிதியின் நாடித் துடிப்பு இயல்பு நிலைக்குத் திரும்பியது. தொடர்ந்து அவர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
Tamil Nadu: DMK president M. Karunanidhi is being taken to Chennai's Kauvery Hospital. Visuals from outside his residence, where supporters have gathered in large numbers. pic.twitter.com/T0vgvGz4zR
— ANI (@ANI) July 27, 2018
மு.க.அழகிரி, ஸ்டாலின், ராசாத்தி அம்மாள், கனிமொழி உள்ளிட்ட குடும்பத்தினரும் மருத்துவமனையில் உள்ளனர்.
#EarlierVisuals: MK Stalin, Kanimozhi, MK Alagiri, Dayanidhi Maran, TR Balu among those present at M Karunanidhi's residence. Karunanidhi has been admitted to Chennai's Kauvery Hospital. pic.twitter.com/W2HTPqmzev
— ANI (@ANI) July 27, 2018