'தகிடுதித்தம்' செய்த மாவட்ட செயலாளர்கள்: கடும் கோபத்தில் கருணாநிதி- காக்கும் முயற்சியில் ஸ்டாலின்
சென்னை: குறுநில மன்னர்கள் போல செயல்பட்டு வரும் 10 மாவட்ட செயலாளர்களை நீக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
தி.மு.க உள்கட்சித் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. ஆனால், இந்தத் தேர்தலில் மாவட்ட செயலாளர்களின் 'அருள்' இல்லாதவர்கள் சாமர்த்தியமான வழிகளில் புறக்கணிக்கப்பட்டுவிட்டனர். இவ்வாறு செயல்பட்ட மாவட்ட செயலாளர்களில் பலர் ஸ்டாலின் ஆதரவாளர்கள் ஆவர்.

இதையடுத்து புறக்கணிக்கப்பட்ட பல நிர்வாகிகள் தி.மு.க தலைவர் கருணாநிதியிடமே நேரடியாக புகார்களைக் குவித்ததையடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தி.மு.க தலைமை முடிவெடுத்துள்ளது.
இதைத் தொடர்ந்து இதில் சம்பந்தப்பட்ட 10 மாவட்ட செயலாளர்களை அதிரடியாக பதவி நீக்கம் செய்ய கருணாநிதி முடிவெடுத்து அதை இன்று அறிவிப்பதாக இருந்தாராம். ஆனால், அந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கருணாநிதியிடம் ஸ்டாலின் கூறி வருவதாகத் தெரிகிறது.
இதையடுத்து முக்கிய திமுக பிரமுகர்கள், மாவட்டச் செயலாளர்களுடன் திமுக தலைவர் கருணாநிதி ஆலோசனை நடத்தி வருகிறார். இக் கூட்டத்தில் ஸ்டாலினும் பங்கேற்றுள்ளார்.
கோபாலபுரத்தில் இக் கூட்டம் நடக்கிறது.












Click it and Unblock the Notifications