Breaking: பாஜகவுக்கு எதிரான முழக்கமாக மாறிய கருணாநிதி நினைவேந்தல்!
திமுக தலைவர் கருணாநிதிக்கு நடத்தப்படும் நினைவேந்தல் கூட்டம் தற்போது சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் தொடங்கி உள்ளது.
சென்னை: திமுக முன்னாள் தலைவர் கருணாநிதிக்கு நடத்தப்படும் நினைவேந்தல் கூட்டம் பாஜகவுக்கு எதிரான பிரகடனத்தை வெளியிடும் கூட்டமாக மாறிப் போனது.
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இந்த நினைவேந்தல் கூட்டம் நடந்தது. இககூட்டத்தில் பேசிய தலைவர்கள் அனைவருமே பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும் அதுதான் கருணாநிதிக்கு நாம் செலுத்தும் சரியான அஞ்சலியாக இருக்க முடியும் என்று வலியுறுத்திப் பேசினர்.
சோனியா காந்திக்கு, கருணாநிதி ஒரு தந்தையை போன்றவர்- குலாம் நபி ஆசாத்
எமெர்ஜென்சியை மீண்டும் கொண்டுவர மாட்டேன் என கூறினார் இந்திரா காந்தி- குலாம் நபி ஆசாத்
எமெர்ஜென்சி மோசமானதாக இருந்திருக்கலாம், ஆனால் அதைவிட மோசமான நிகழ்வுகள் இப்போது நடக்கின்றன
கருணாநிதி மட்டும் உடல்நலத்தோடு இருந்திருந்தால் பாஜக அரசுக்கு எதிராக குரல் கொடுத்திருப்பார்
அநீதி, கூட்டு படுகொலைகள், போராட்ட குரல்கள் ஒடுக்கப்படுவதை கருணாநிதி எதிர்த்திருப்பார்
5 முறை முதல்வராகவும், 13 முறை சட்டசபை உறுப்பினராகவும் இருந்தவர் கருணாநிதி
பதவிகள் பெருகியபோதும் கருணாநிதி ஒரு அறை கொண்ட சிறு வீட்டில்தான் வசித்தார்- குலாம் நபி ஆசாத்
பாஜக, காங். இரு கட்சிகளுடனும் கருணாநிதி கூட்டணி வைந்தார், ஆனால் தனது கொள்கையை விடவில்லை

தலைவர், எழுத்தாளர், கலைஞர் என பல துறைகளிலும் சிறந்தவர் கருணாநிதி மட்டுமே- குலாம் நபி ஆசாத்
உழவர் சந்தை, கூட்டுறவு கடன் தள்ளுபடிகள் உட்பட பல புரட்சிகர நடவடிக்கைகள் எடுத்தார்
சிறுபான்மையினருக்கு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு தேவை என தென் மாநிலங்களில் முதலில் கேட்டவர் கருணாநிதி
பிரிந்து போக விரும்புபவர்களை போக விட்டு விடுங்கள் - பரூக் அப்துல்லா
இருப்பவர்கள் மட்டும் தொடர்ந்து இருக்கட்டும் - பரூக்
இதை நான் நீண்ட காலமாக சொல்லி வருகிறேன் - பரூக் அப்துல்லா
தினந்தோறும் ஏதாவது நடக்குமா என்று அஞ்சி வாழ முடியாது - பரூக்
ஆனால் இன்று அதுவரை காத்திருக்க முடியாது - பரூக் அப்துல்லா
இந்த மாபெரும் மனிதர் காட்டிய வழியில் அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும் - பரூக் அப்துல்லா
ஒருவரை ஒருவர் மதிக்கும், மொழியைக் கற்றுக் கொள்ளும் தன்மையை அனைவரும் பழகிக் கொள்ள வேண்டும் - பரூக் அப்துல்லா
எங்குமே இன்று அதிகாரம் இல்லை, ஏழைகள் அதிகரித்து விட்டனர் - பரூக் அப்துல்லா
உலகிலேயே அதிக ஏழைகள் இந்தியாவில்தான் உள்ளனர் - பரூக்
நாடெங்கும் துயரங்கள்தான் தலைவிரித்தாடுகின்றன = பரூக் அப்துல்லா
ஆனால் பாஜகவினரோ அடுத்த ஆண்டே இந்தியா பொருளாதார வல்லரசாகப் போவதாக கூறுகின்றனர் - பரூக்

















Click it and Unblock the Notifications