For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விசாலாட்சி நெடுஞ்செழியன் மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல்

விசாலாட்சி நெடுஞ்செழியன் மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கள் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: விசாலாட்சி நெடுஞ்செழியன் மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Karunanidhi mourned for Visalakshi Nedunchezhian death

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் 'திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக இருந்து தமிழகத்தின் பட்டிதொட்டிகளில் எல்லாம் அவரது காலடி படாத ஊர்களே இல்லை. அவரது லட்சிய முழக்கம் எதிரொலிக்காத இடங்களே இல்லை என்று வியந்து போற்றும் அளவுக்கு அரும்பணி ஆற்றிய, நாவலர் நெடுஞ்செழியன் அவர்களின் அன்புத் துணைவியார், டாக்டர் விசாலாட்சி நெடுஞ்செழியன் அவர்கள் நேற்று மறைந்த செய்தியினை அறிந்து மிகவும் வருந்துகிறேன்.

காங்கிரஸ் கட்சி ஆட்சி தமிழகத்தில் நடைபெற்ற போது, திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கட்சியாக இருந்த காலத்திலும் சரி, அதற்குப்பின் தி.மு.கழகம் ஆளுங்கட்சியாகப் பொறுப்பேற்ற நேரத்திலும் சரி அம்மையார் அவர்கள் திறம்பட அரசுப்பணி ஆற்றியவர்; என்றைக்கும் திராவிட இயக்க உணர்வோடு இயங்கியவர். அவரது மறைவால் வருந்தும் அவருடைய குடும்பத்தினருக்கும் , உறவினர்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் ' என தெரிவித்துள்ளார்.

English summary
DMK Chief Karunanidhi mourned for Visalakshi Nedunchezhian death.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X