இன்று மாலை 6 மணிக்கு... கருணாநிதி, சோனியா ஒரே மேடையில் பேசுகிறார்கள்!
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் இன்று ஒரே மேடையில் பிரச்சாரம் செய்து பேசி வாக்கு சேகரிக்கவுள்ளனர்.
சென்னை தீவுத் திடலில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்குத் தொடங்கி இரவு 8 மணிக்குக் கூட்டம் நிறைவடையும்.

இந்தக் கூட்டத்தில் திமுக, காங்கிரஸ் தலைவர்களோடு கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக சோனியா காந்தி மாலை 4 மணியளவில் டெல்லியிலிருந்து சென்னை வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி சென்று அங்கு பிரச்சாரம் செய்து பேசுகிறார். அதைத் தொடர்ந்து சென்னை திரும்பி தீவுத் திடல் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
கருணாநிதி, சோனியா பிரச்சாரக் கூட்டத்திற்காக பிரமாண்டமான ஏற்பாடுகளை, திமுகவினரும், காங்கிரஸாரும் செய்துள்ளனர். பலத்த பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications