நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிகப்படியான போராட்டங்கள்- ஆய்வறிக்கை தகவல்

Subscribe to Oneindia Tamil

தமிழகத்திலே தான் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு பிரச்சினைக்காக மக்கள் போராட வேண்டிய நிலைமை இந்த ஆட்சியிலே உள்ளது. போராட்டங்களா? அ.தி.மு.க. ஆட்சியிலா? இல்லவே இல்லை என்று முதலமைச்சர் இப்போது மறுக்கக் கூடும். ஆனால் 22-9-2015 அன்று காவல் துறை மானிய விவாதத்திற்கு பதில் கூறிய முதலமைச்சர் ஜெயலலிதாவே, தன்னுடைய உரையில், "உண்மை நிலைமை என்ன? காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு கூடத்தினர் மேற்கொண்ட ஆய்வின்படி தமிழ்நாட்டில் தான் அதிகப்படியான போராட்டங்கள் நடைபெற்றுள்ளன எனத் தெரிய வருகிறது. இது நாட்டின் ஒட்டு மொத்த எண்ணிக்கையிலே 25 விழுக்காட்டிற்கும் அதிகமாகும். அதாவது, ஒட்டு மொத்தமாக இந்தியாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட் டங்களில் 25 சதவிகிதம், தமிழ்நாட்டில் மட்டுமே நடைபெற்றுள்ளன" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Karunanidhi urges TN govt on Palar issue

மேலும் இந்த ஆட்சியில் காவல் துறையில் உள்ள காலிப் பணி இடங்கள் நிரப்பப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. காவல் துறையினரின் மொத்த அனுமதிக்கப்பட்ட இடங்கள் 1 இலட்சத்து 21 ஆயிரத்து 14 பேர் என்றால், அதிலே 19 ஆயிரத்து 157 இடங்கள் காலியாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தக் காலிப் பணி இடங்களை நிரப்ப வேண்டுமென்று சென்னை உயர் நீதி மன்றத் தலைமை நீதிபதியே உத்தரவிட்ட போதிலும் அந்த இடங்கள் நிரப்பப்பட வில்லை. காவல் துறை அதிகாரிகள் வீடுகளிலும், ஓய்வு பெற்ற அதிகாரிகள் வீடுகளிலே கூட "ஆர்டர்லி" என்ற பெயரால் காவல் துறையினர் பணியாற்றும் போக்கு இன்னமும் தொடருகிறது.

இப்படி இரண்டு பேர் செய்ய வேண்டிய பணியை ஒருவரே ஏற்றிட வேண்டிய தாங்கவியலாப் பணிச்சுமை, மிகக் குறைவான சம்பளம், குடும்பத்தாரின் தேவைகள் - குழந்தைகளின் கல்வி - நாளும் அதிகரித்து வரும் விலைவாசி போன்றவற்றினால் ஏற்படும் நெருக்கடி - மன அழுத்தம், மேலதிகாரிகள் நடத்தும் முறையால் உண்டாகும் தன்மானச் சிதைவு ஆகியவற்றால் தமிழகக் காவல் துறையினர் குறிப்பாக அடுத்தடுத்துச் சாதாரண நிலையில், காவலர் முதல் துணைக் கண்காணிப்பாளர் வரை பணியாற்றுவோர், ஒவ்வொரு நாளும் கடக்க வேண்டிய பிரச்சினைகளும், அனுபவித்துத் தீர வேண்டிய அவலங்களும் எண்ணிலடங்காதவை. பாதிக்கப்படும் பொது மக்கள், ஆதிக்கம் செலுத்தும் மேலதிகாரிகள், இன்னலுறும் குடும்பத்தினர் என்ற முக்கோணத்திற்குள் சிக்கித் தவித்திடும் சாதாரண நிலைக் காவல் துறையினரை அரசு, காக்கும் கரங்களாக இருந்து அரவணைத்து, கடமையாற்றிட அனுமதித்திட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+