dmk, karunanidhi, police, திமுக, கருணாநிதி, பாலாறு

Subscribe to Oneindia Tamil

தமிழக காவலர் ஒருவரிடம் வேலைப் பளு பற்றி கேட்டபோது, "காவலர் ஒருவர் நாள் ஒன்றுக்கு 8 மணி நேரத்திற்கு மேல் பணியாற்றக் கூடாது என்று விதிகள் இருந்த போதிலும், காவலர்களில் பலர் வாரம் முழுவதும் ஒவ்வொரு நாளும் 24 மணி நேரம் பணியாற்றுகிறார்கள். முதல் நாள் இரவு நீண்ட நேரத்திற்குப் பிறகு வீடு திரும்பினாலும், மறுநாள் காலை 7 மணி அணிவகுப்புக்கு காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும். காவல் துறையில் இளைஞர் படையில் கடந்த ஆண்டு பணியிலே சேர்ந்த 11,000 பேரில், 2674 பேர் விலகி விட்டார்கள், 8,326 பேர் தான் காவலர் பயிற்சி பெறுகிறார்கள்" (ஆயிரக்கணக்கானோர் விலகியதற்குக் காரணம் இடையறாத பணியும், குறைவான சம்பளமும் தான்) என்றெல்லாம் பதிலளித்திருக்கிறார்.

Karunanidhi urges TN govt on Palar issue

இன்ஸ்பெக்டர் ஒருவர் கூறும்போது, காவல் துறையினருக்கு இந்த அளவுக்குக் குறைந்த ஊதியம் அளிப்பதால்தான் அவர்கள் லஞ்சம் வாங்கத் தள்ளப் படுகிறார்கள். காவலர் ஒருவரின் வீட்டு வாடகைப் படி 840 ரூபாய் தான் என்கிற போது, சென்னையில் வாடகைக்கு எப்படி ஒரு வீட்டை அவரால் பிடிக்க முடியும் என்றும் கேட்டிருக்கிறார்.

மகளிர் காவலர் ஒருவர் கூறும்போது 2009ஆம் ஆண்டு பணியிலே சேர்ந்த போது காவல் துறையில் இணைந்தது பற்றி மனத்தளவில் ஒரு பெருமை இருந்ததாகவும், அது தற்போது அழிந்து விட்டது என்றும் வருத்தப்பட்டிருக்கிறார். இது தான் தமிழகக் காவல் துறையினரின் நிலைமை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+