இறந்த பின்னும் 14 மணி நேரம் போராடி வென்ற கருணாநிதி
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் புகழுடலை மெரினாவில் அடக்கம் செய்யலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Recommended Video
சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் புகழுடலை மெரினாவில் அடக்கம் செய்யலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவரது உடலை அண்ணாவை அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் அருகிலேயே அடக்கம் செய்ய உத்தரவை பிறப்பித்தது. இதனால் தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர், கலைஞருக்கு இட ஒதுக்கீடு கிடைத்து விட்டது.
இறந்த பின்னும் 14 மணி நேரம் நடந்த போராட்டத்திற்கு பிறகு அவருக்கு கிடைத்த வெற்றி இது.
நீதிமன்ற உத்தரவையடுத்து ஸ்டாலின் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் பெருக தொண்டர்களை நோக்கி வணங்கினார்.
கதறி அழுதபடி நன்றி தெரிவித்த மு க ஸ்டாலின் மீண்டும் தனது தந்தை கருணாநிதி அவர்களை சந்திக்க திரும்பிய பொழுது தள்ளாடி விழப் பார்த்தார். அவரை அருகில் இருந்த ஆ.ராசா மற்றும் துரைமுருகன் ஆகியோர் தாங்கிப் பிடித்தனர்.
எங்களால் பெற முடியவில்லை; அரசாங்கத்தால் தர முடியவில்லை, வாழ்நாளெல்லாம் போராடிய தலைவர், மரணத்துக்குப் பிறகும் 14 மணி நேரம் போராடி வென்றிருக்கிறார் என கூறியுள்ளார் துரை முருகன்.