For Daily Alerts
Just In
கரூர் விவசாயிகள் ஜாலி.... மழையால் நிலத்தடி நீர் உயர்வு.. கிணற்றுப் பாசனம் மூலம் சாகுபடியில் தீவிரம்!
கரூர்: கரூரில் தொடர் மழை காரணமாக, நிலத்தடி நீர் உயர்ந்துள்ளதால், கிணற்று பாசனம் மூலம் சம்பா சாகுபடி தீவிரமடைந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பெய்த தொடர்மழை எதிரொலியாக நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இதையடுத்து கரூர் மாவட்டத்தில் உள்ள கிணறுகளில் தண்ணீர் அதிகரித்துள்ளது.
தற்போது சம்பா சாகுபடி தீவிரமடைந்துள்ள நிலையில் கரூர் அருகே ஆச்சிமங்கலம், வீரராக்கியம், மாயனூர், கிருஷ்ணராயபுரம், மகாதானபுரம், லாலாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வயலில் சாகுபடிக்கான உழவு பணி தீவிரபடுத்தப்பட்டு நாற்றாங்கால் நடும் பணி தீவிரப்படுத்துள்ளது.
இதையடுத்து விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். பல மாதங்களுக்கு பின்னர் பெய்த இந்த மழையால் சாகுபடி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து கடவுளுக்கு நன்றி கூறியபடி விவசாயப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Comments
English summary
Karur farmers are happily engaging in farming activities with rise in ground water level.
Story first published: Tuesday, November 11, 2014, 14:36 [IST]