ஆடையை அவிழ்த்துவிட்டு ஆட்டம்போட்ட குடிமகன்.. கண்ணை மூடியபடி ஓடிய கரூர் பெண்கள்
கரூர்: கரூர் நகரில் நடுத்தர வயது ஆண் நடுரோட்டில் நிர்வாணமாக ஆடியது அங்குள்ளவர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலும் குடிபழக்கத்துக்கு ஆளாகி நடுரோட்டில் மயங்கி விழுவது சாமானிய விஷயமாகிவிட்டது.

அங்கு நடக்கும் இந்த சம்பவங்களை வீடியோ எடுத்து வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக்கில் போட்டு மகிழ்வது பிற மக்களின் வேடிக்கையாகிவிட்டது.
இந்நிலையில், நண் பகல் நேரத்தில், கரூர் சி.எஸ்.ஐ ஆண்கள் மேல் நிலைப்பள்ளி அருகேயுள்ள ஆஷாத் ரோட்டில் சுமார் 1 மணி நேரமாக நடுத்தர வயது ஆண் ஒருவர், கீழே ஆடையை அவிழ்த்துவிட்டு நடனமாடியுள்ளார்.
இதனால், பெண்கள் கண்களை மூடிக்கொண்டு அங்கிருந்து ஓட்டம்பிடித்தனர். அந்த நபர் குடிபோதையில் இருந்ததால் அவரை கட்டுப்பட்ட பிற ஆண்களும் முயலவில்லை. இந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications