கல்வியாளர், பெரும் பணக்காரர், கவிதைக்காரர்.. அவர்தான் ஸ்ரீபெரும்புதூர் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன்
சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் கல்வியாளரும், பெரும் பணக்காரருமான ஜெகத்ரட்சகன் திமுக சார்பில் போட்டியிடுகிறார்.
நாடாளுமன்ற தேர்தல் வேலைகளில் திமுக மும்முரமாக ஈடுபட்டுள்ளது. வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட கையோடு தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் திமுக சார்பில் ஸ்ரீபெரும்புதூரில் போட்டியிடும் ஜெகத்ரட்சகனை பற்றி சில தகவல்களை தெரிந்து கொள்வோம்.

கலிங்கமலைக்காரர்
ஸ்ரீபெரும்புதூர் திமுக வேட்பாளரான ஜெகத்ரட்சகன்(64) விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கலிங்கமலை கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் தற்போது அடையாறு, கஸ்தூரிபா நகர், முதல் மெயின் ரோட்டில் வசித்து வருகிறார்.

அதிமுக
கெஜத்ரட்சகன் 1980ம் ஆண்டு உத்தரிமேரூர் சட்டசபை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 1984ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் களம் இறங்கி வெற்றி கண்டார். அதன் பிறகு 1989ம் ஆண்டு உத்திமேரூரில் ஜானகி அணியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

திமுக
கெஜத்ரட்சகன் 1999ல் திமுக சார்பில் அரக்கோணம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வென்றார். 2009ம் ஆண்டில் மீண்டும் அதே தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் மத்திய தகவல் மற்றும் விளம்பர துறை, எரிசக்தி துறை, வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சராக இருந்துள்ளார்.

கல்வியாளர்
பாரத் மருத்துவக் கல்லூரி, ஸ்ரீபாலாஜி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஆகியவற்றை ஜெகத்ரட்சகன் நடத்தி வருகிறார். அவருக்கு அனுசுயா என்ற மனைவியும், லட்சுமி நாராயணா என்ற மகனும், ஸ்ரீநிஷா என்ற மகளும் உள்ளனர்.

ஆகஸ்ட் 15
ஜெகத்ரட்சகன் எம்.ஏ. படித்த கல்வியாளர் ஆவார். அவர் நம் நாட்டின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications