For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ.வின் கொடநாடு எஸ்டேட் காவலாளி அடித்து கொலை: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!

ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலாளி அடித்துக் கொல்லப்பட்டது குறித்து 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

கோத்தகிரி: ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலாளி அடித்துக் கொல்லப்பட்டது குறித்து 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சிறுதாவூர் பங்களாவில் கடந்த சில நாள்களுக்கு முன்னர் தீ விபத்து ஏற்பட்டது. அதில் ஏதோ முக்கிய ஆவணங்கள் எரிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

Kodanad Estate security guard murder: 5 special teams set up

இந்நிலையில் நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் உள்ள ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். மற்றொரு காவலாளி கிஷண்பகதூர் படுகாயங்களுடன் கோத்தகிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொடநாடு எஸ்டேட்டில் முக்கியமான ஆவணங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம். அந்த ஆவணங்களை கொள்ளையடிக்க யாரேனும் முயற்சித்தனரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

English summary
Security guard belongs to Kodanad Estate was brutally murdered. Another one was admitted in Coimbatore Hospital. Specials teams have to be set up for investigation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X