கொடநாட்டில் கொலை செய்தது எப்படி… மேலும் இருவரை பிடிக்க கேரளா விரைந்தது போலீஸ்: வீடியோ
கொடநாட்டில் கொலை செய்தது எப்படி என்று செய்முறை விளக்கம் காண்பித்த பின்னர் மேலும் இருவரை பிடிக்க தமிழக போலீஸ் கேரளா விரைந்தது.
சென்னை: கொடநாடு கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் இருவரைப் பிடிக்க போலீசார் கேரளா மீண்டும் விரைந்தனர்.
கொடநாடு எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டுள்ள வழக்கில் தேடப்பட்ட 11 குற்றவாளிகளில் போலீசார் இதுவரை 7 பேரை கைது செய்துள்ளனர்.

கனகராஜ் என்பவர் சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ளார். சயான் என்பர் சாலைவிபத்தில் படுகாயம் அடைந்து கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் முக்கிய குற்றவாளியான மனோஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரை கொடநாடு பங்களாவிற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு அவர் கொலை செய்தது குறித்து செய்முறை விளக்கம் செய்து காட்டினார். இதனைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவரிடம் பெற்ற தகவலின் அடிப்படையில் மேலும் இருவரை பிடிக்க போலீசார் தயாரானார்கள்.
தலைமறைவாக உள்ள அவர்கள் இருவரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டிய போலீசார் கேரளாவிற்கு விரைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications