காவிரிக்காக கடைகள் மூடல்: வெறிச்சோடி கிடக்கும் கோயம்பேடு மார்க்கெட்
காவிரிக்காக இன்று கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.
Recommended Video

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகம் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறது. இதில் மத்தியில் எந்த ஆட்சி வந்தாலும் தமிழகத்தின் கோரிக்கை மட்டும் நிறைவேறுவதே இல்லை.

இந்நிலையில் காவிரிக்காக திட்டம் ஒன்றை 6 வாரங்களுக்குள் ஏற்படுத்த வேண்டும் என்று கடந்த பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அதற்கான காலக்கெடு முடிவடைந்த போதிலும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை.
இதனால் தமிழகத்தில் மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுபெற்றன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து தமிழகத்தில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதுபோல் கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள கடைகளும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளன. அதன்படி 2500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. 200-க்கும் மேற்பட்ட மூட்டை தூக்கும் தொழிலாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடையடைப்பு போராட்டம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதால் சரக்கு லாரிகள் ஏதும் மார்க்கெட்டுக்கு வரவில்லை. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கோயம்பேடு மார்க்கெட் வெறிசோடி காணப்படுகிறது.
-
நிபா அலர்ட்: வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு.. எல்லை மாவட்டங்கள் உஷார்! கேரளா மூலம் புது பிரச்சனை -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு?












Click it and Unblock the Notifications