நிறுத்திக்கனும், நடராஜனும், தம்பிதுரையும் கட்சியை அழிக்கப் பார்க்கிறார்கள்.. கே.பி.முனுசாமி ஆவேசம்
கிருஷ்ணகிரி: நடராஜனும் தம்பிதுறையும் கட்சியை சீரழிக்கப் பார்க்கிறார்கள் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். அதிமுக எங்கள் கட்சி என கூறுவதை நடராஜன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மன்னார்குடி கும்பலுக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமிக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. அண்மையில் தஞ்சாவூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பேசிய திவாகரன், அதிமுகவை காப்பாற்றியதில் தங்களுக்கு பெரும் பங்கு உள்ளதாக கூறினார்.
அதிமுகவை தாங்கள் தான் காப்பாற்றி வருவதாகவும் தெரிவித்தார். இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கடும் கண்டனம் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய நடராஜன் குடும்ப அரசியல் செய்வோம் என பகிரங்கமாக கூறினார். நடராஜனின் இந்த பேச்சு அதிமுக தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திவாகரன் மற்றும் நடராஜனின் பேச்சுக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது,

நடராஜன் செய்த துரோகம்
"நடராஜன் அதிமுகவுக்கு செய்த துரோகத்தால் தான் ஜெயலலிதா அவரை கட்சியில் இருந்து நீக்கினார் என்று தெரிவித்தார். அப்படி இருக்கும்போது அவர் இறந்த பிறகு கட்சிக்குள் வந்து நான் தான் அதிமுகவை காப்பாற்றினேன் என்று கூறுகிறார்.

சசிகலாவை முதன்முதலாக சந்தித்தேன்
என்னை நக்சலைட் என்றும், தனது காலில் விழுந்ததால்தான் எம்.ஜி.ஆர் மன்ற பதவி கொடுத்ததாகவும் நடராஜன் சொல்லியிருக்கிறார். ஆனால் கல்லூரியில் படிக்கும்போதே நேரடியாக எம்.ஜி.ஆர். மூலம் நான் கட்சிக்கு வந்தேன். 2011ல் என்னை அமைச்சராக அறிவித்த பின்னர்தான் சசிகலாவை முதன்முதலாக சந்தித்து பேசினேன்.

தீய சக்தி நடராஜனை வேளியேற்றுங்கள்
நான் எப்போதும் பொதுச்செயலாளர்களிடம்தான் பேசுவேன். அதேபோல்தான் தற்போது நான் உங்களிடம் கோரிக்கை வைக்கிறேன். தீய சக்தி நடராஜனை வேளியேற்றுங்கள்'' என்று அவர் அதிமுக பொதுச்செயலாளருக்கு கோரிக்கை விடுத்தார்.

கட்சியை சீரழிக்கப்பார்க்கிறார்கள்
மேலும் நடராஜனும் தம்பிதுறையும் கட்சியை சீரழிக்கப் பார்க்கிறார்கள். அதிமுக எங்கள் கட்சி என கூறுவதை நடராஜன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்
அதிமுக எங்கள் கட்சி என்று கூறுவதை நடராஜன் நிறுத்திக் கொள்ளவேண்டும். இல்லையெனில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள்
அதிமுக நாங்கள் வளர்த்த கட்சி என நடராஜன் கூறுவதை தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். ஏற்கனவே திவாகரனின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த கே.பி.முனுசாமிக்கு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்,
அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, ஓ.எஸ்.மணியன், காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன், துரைக்கண்ணு ஆகியோரும் கண்டனம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி அறிவித்த எடப்பாடி! ஆனா 5 பவுன் நகை கடன் ரத்து இல்லையே! -
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம்












Click it and Unblock the Notifications