குட்கா விற்க லஞ்சம் பெற்ற அமைச்சர் அதிமுக விரோதி.. கே.பி. முனுசாமி ‘பொளேர்’
போதை பொருள் விற்க லஞ்சம் பெற்ற விவகாரத்தில் சிக்கி இருக்கும் அமைச்சர் அதிமுகவின் விரோதி. அவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பவர் ஜெயலலிதாவின் அன்புக்குரியவர் என்று கே.பி. முனுசாமி கூறியுள்ளார்.
சென்னை: குட்கா விற்க லஞ்சம் பெறப்பட்ட விவகாரத்தில் உண்மை நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓபிஎஸ் அணியில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி கூறியுள்ளார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் கே.பி. முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
எடப்பாடி அணியில் உள்ள புகழேந்தி, தம்பிதுரை, ஜெயக்குமார் ஆகிய மூவரும் மூன்று அணிகளாக உள்ளனர். இவர்கள் மூவரும் மக்கள் செல்வாக்கு இல்லாதவர்கள். கட்சி தொண்டர்களிடையேயும் இவர்களுக்கு வரவேற்பு கிடையாது.

மூன்று அணி
இப்படிப்பட்டவர்கள், தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்வதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள். எடப்பாடி அணி, தினகரன் அணி, சசிகலா அணி என அந்தப் பக்கம் 3 அணிகள் இருக்கின்றன. எங்கள் பக்கம் ஒரே அணிதான் இருக்கிறது

கோரிக்கை நிறைவேறினால் இணைப்பு
ஜெயலலிதா மரணத்திற்கு விசாரணை வேண்டும். இந்த இயக்கத்தை அழிக்கக் கூடிய சசிகலா குடும்பத்தை வெளியேற்ற வேண்டும். இந்த 2 கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டால் அவர்களுடன் இணைவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை.

பதவி போனால் ஓடி வருவார்கள்
நாங்கள் நீண்ட காலமாக அமைப்பில் இருக்கிறவர்கள். நாங்கள் பதவிக்காக இங்கு இல்லை. அங்கே இருப்பவர்களுக்கு பதவி போய்விட்டால் ஓபிஎஸ் பக்கம் வந்துவிடுவார்கள். அப்போது இணைப்பு என்பதே கிடையாது. ஒரே இயக்கமாக தானாக மாறிவிடும்.

குட்கா விற்க லஞ்சம்
குட்கா போதைப் பொருள் விவகாரம் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதில் ஈடுபட்ட அமைச்சர் அதிமுகவின் விரோதி. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி எடுப்பவர்கள்தான் உண்மையான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் அன்புக்குரியவர்களாக இருக்க முடியும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications