கிருஷ்ணகிரி துணை வட்டாட்சியர் சாலை விபத்தில் அநியாய பலி! - வீடியோ
கிருஷ்ணகிரி பேச்சம்பள்ளி துணை வட்டாட்சியர் பணி முடித்து வீடு திரும்புகையில் சாலை விபத்தில் அநியாயமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பேச்சம்பள்ளி துணை வட்டாட்சியர் பணி முடிந்து வீடு திரும்போது ஏற்பட்ட சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி பேச்சம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் துணை வட்டாட்சியராக பணிபுரிந்து வந்தவர் சரவணன். இவர் நேற்று விடுமுறை தினம் என்றபோதிலும் சில பணிகளை அலுவலகத்துச் சென்று முடித்துவிட்டு வீட்டுக்கு தன் இருசக்கர வாகனத்தில் திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாரதவிதமாக அவருடைய இருசக்கர வாகனம் சாலையோர தடுப்புச் சுவரில் மோதி கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்துகொண்டிருந்த லாரி அவர் உடல் மீது ஏறிச் சென்றது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த சூலகிரி போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைகு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தற்செயலாக ஏற்பட்ட விபத்தா அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலையா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவில் தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையிலானவர்கள் சாலை விபத்துகளில் உயிர் இழக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications