கூடங்குளம் முதல் அணு உலையில் 69 கோடி யூனிட் மின் உற்பத்தி
விருதுநகர்: கூடங்குளம் முதல் அணு உலையில் இதுவரை 69 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அக்டோபரில் 2வது அணு உலை இயங்க துவங்கும் என வாளக இயக்குனர் சுந்தர் தெரிவித்துள்ளார்.
விருதுநகரில் அணுசக்தி விழிப்புணர்வு' பேரணி நடந்தது. கூடங்குளம் அணு மின் நிலையம், விருதுநகரை சேர்ந்த ஒரு தனியார் கல்லூரியுடன் சேர்ந்து நடத்திய இப்பேரணியை கூடங்குளம் அணு மின் நிலைய வாளக இயக்குனர் சுந்தர் துவங்கி வைத்தார்.
பேரணியைத் துவக்கி வைத்து, அவர் பேசியதாவது: அணுசக்தியால், எந்த ஆபத்தும் கிடையாது. இதுகுறித்த விளங்கங்களை, பொதுமக்களுக்கு, மாணவர்கள் எடுத்து கூற வேண்டும்.

கூடங்குளத்தில் முதல் அணு உலை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 69 கோடி யூனிட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கூடங்குளம் முதல் யூனிட்டில் 75 சதவீத மின் உற்பத்தி செய்யப்படுகிறது. அதன்படி நாள்தோறும் 680 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
அணுசக்தி கட்டுப்பாட்டு குழு அனுமதியை தொடர்ந்து இது 100 சதவீதமாக உயர்த்தப்படும். இன்னும் ஒரு மாதத்தில் கூடங்குளத்தில் 100 சதவீதம் உற்பத்தி செய்யப்படும். 2வது அணு உலை கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. அக்டோபரில் மின் உற்பத்தி துவங்கும்.
இந்தியாவில், கூடங்குளம் உட்பட ஏழு இடங்களில், அணு உலைகள் உள்ளன. கூடங்குளம் அணுமின் நிலையம் கட்டும்போதே, பாதுகாப்பிற்காக, 40 சதவீதம் செலவு செய்யப்பட்டுள்ளது. சுனாமி, நிலநடுக்கம் ஏற்பட்டாலும் பாதிப்பு ஏற்படாத வகையில், கடல் மட்டத்திலிருந்து, 25 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.
இது, மூன்றாம் தலைமுறை பாதுகாப்பு அம்சங்களுடன் கட்டப்பட்டுள்ளதால், இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டாலும், அணு உலை, மூன்று நொடியில் தானாக நின்று விடும். இந்த அணு உலையை, இதுவரை, 1.50 லட்சம் பேர் பார்வையிட்டு சென்றுள்ளனர் என்று சுந்தர் கூறினார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications