Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பசுமைவழி சாலை.. குள்ளம்பட்டி விவசாயிகள் ஆடு, மாடுகளுடன் கோயிலில் தஞ்சம்.. இறைவனிடம் முறையீடு!

குள்ளம்பட்டி விவசாயிகள் இறைவனிடம் முறையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

சேலம்: 8 வழிசாலை திட்டத்தினை கைவிட கோரி, சேலம் குள்ளம்பட்டி கிராம மக்கள், ஆடு, மாடுகளுடன் கோயிலில் தஞ்சம் அடைந்து இறைவனிடம் முறையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சேலம்-சென்னை இடையே பசுமை வழி சாலை அமைக்கும் திட்டத்திற்கு சேலம், தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 277 கிலோ மீட்டரில் நிலம் கையகப்படுத்தும் பணியினை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

Kullampatti Farmers protest-against Greenway Road Project in Salem

இதனால் விளைநிலங்கள், பசுமை காடுகள், மலைகள், நீர் நிலைகளை என வளங்களை அழித்து பசுமை வழிச்சாலை அமைக்கப்படுவது 5 மாவட்ட மக்களையும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.

அதன்படி, கடந்த 3 தினங்களுக்கு முன்புகூட, சேலம் மாவட்டம் குள்ளம்பட்டி மக்கள் தங்கள் கிராமத்திலேயே உள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோவிலுக்கு கருப்பு பட்டையுடன் சென்றனர். நடைபெற்று வரும் பசுமை வழிசாலை பணிகளை தடுத்து நிறுத்தக்கோரி அம்மனிடம் மனு அளித்திருந்தனர். இந்நிலையில், இன்று மீண்டும் தங்களது எதிர்ப்பினை தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதற்காக ஆடு மாடுகளுடன் கோயிலில் தஞ்சம் அடைந்து இறைவனிடம் முறையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். 8 வழி சாலை திட்டத்தினை அரசு கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+