Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருமுருகன் காந்தி உள்பட 4 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து... ஹைகோர்ட் அதிரடி

திருமுருகன் காந்தி உள்பட 4 பேர் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    திருமுருகன் காந்தி மீதான குண்டர் சட்டம் ரத்து-வீடியோ

    சென்னை: திருமுருகன் காந்தி உள்பட 4 பேர் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    கடந்த 21-ஆம் தேதி மெரினாவில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை திருமுருகன் காந்தி ஒருங்கிணைத்து நடத்தினார். மெரினாவில் போராட்டம் நடத்த தடை இருக்கும் நிலையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் திருமுருகன் காந்தி, டைசன், அருண்குமார், இளமாறன் உள்ளிட்டோர் கடந்த மே 23-இல் கைது செய்யப்பட்டனர்.

    குண்டர் சட்டம்

    குண்டர் சட்டம்

    அவர்கள் 4 பேரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் அவர்கள் 4 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கு பல்வேறு அமைப்புகளும் கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர்.

    வாபஸ் இல்லை

    வாபஸ் இல்லை

    எனினும் அந்த 4 பேர் மீதான குண்டர் சட்டம் வாபஸ் பெறப்படவில்லை. இந்நிலையில் ஜாமீன் கோரிய இவர்களது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து தங்கள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யும்படி திருமுருகன் உள்பட 4 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    ஓரிரு நாளில் விடுதலை

    ஓரிரு நாளில் விடுதலை

    இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அதில் திருமுருகன் காந்தி உள்பட 4 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார். இதனால் நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்து அவர்கள் நால்வரும் வெளியே வர ஓரிரு நாள்கள் ஆகும் என தெரிகிறது.

    வளர்மதி

    வளர்மதி

    இதேபோல் கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராக துண்டுபிரசுரம் விநியோகித்த சேலம் மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை எதிர்த்து அவரது தந்தை மாதையன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் வளர்மதி மீதான குண்டாஸை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

    அரசுக்கு அதிரடி

    அரசுக்கு அதிரடி

    திருமுருகன் காந்தி, வளர்மதி உள்பட 5 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி எதிர்க்கட்சியினர் சட்டசபையில் கேள்வி எழுப்பினர். அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மீதான குண்டாஸை நியாயப்படுத்தியே பேசினார். இந்நிலையில் எடப்பாடி அரசின் பிடிவாதத்தை மீறி சென்னை உயர்நீதிமன்றம் அவர்களை விடுவித்து அதிரடி காட்டியுள்ளது.

    எதையும் எதிர்கொள்வோம்

    எதையும் எதிர்கொள்வோம்

    சிறையில் இருந்து விடுதலையான திருமுருகன் காந்தி, மிகவும் ஆவேசமாக பேசினார். திகார் சிறையோ... புழல் சிறையோ எங்களுக்கு ஒரு பொருட்டல்ல என்று கூறினார். 4 மாதங்களோ, 4 வருடங்களோ, 40 ஆண்டுகளே எங்களை சிறையில் தள்ளினாலும் நாங்கள் எதிர்கொள்வோம். அந்தமான் சிறையில் தள்ளினாலும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வோம் என்று கூறினார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+