சென்னையில் பெண் டாக்டர் கொலை.. கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலம் கண்டெடுப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை எழும்பூர் அருகே பெண் மருத்துவர் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும் அவரது வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை எழும்பூர் அருகேயுள்ள காந்தி இர்வின் சாலையில் வசித்து வந்த ரோகினி பிரேம் குமாரி தனியார் மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் மருத்துவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இரண்டு கைகளும் கட்டப்பட்ட நிலையில் அவருடைய வீட்டில் ரோகினி பிரேம் குமாரி இறந்து கிடந்தார்.

lady doctor found death in chennai

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடத்திய சோதனையில் வீட்டின் பீரோ உடைக்கப்பட்டிருந்தது. அதிலிருந்த நகை, பணம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

உடலை கைப்பற்றிய போலீசார் கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு பெண் டாக்டர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+