ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சித்த பெண் ஊழியர்!!
ஜெயங்கொண்டம் : நகராட்சி ஆணையரிடம் விடுமுறை கேட்ட விவகாரத்தில் ஜெயங்கொண்டத்தில் பெண் ஊழியர் ஒருவர் அலுவலகத்திலேயே மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் உதவியாளராக பணிபுரிந்து வருபவர் சரஸ்வதி. நகராட்சி அலுவலகத்தின் ஆணையர் அறைக்குள் நேற்று பிற்பகலில் வேகமாக நுழைந்த இவர் திடீரென்று தன்னுடைய உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மற்ற ஊழியர்கள் தண்ணீர் கொண்டுவந்து சரஸ்வதி மீது ஊற்றி தீயை அணைத்தனர். இந்த தீக்குளிப்பு சம்பவத்துக்கு சரஸ்வதி விடுப்பு கேட்டதுதான் காரணம் என்று தெரியவந்துள்ளது.
நகராட்சி ஆணையரிடம் கடந்த 2-ந்தேதி முதல் 19-ந் தேதி வரை சரஸ்வதி விடுப்பு கோரி கடிதம் கொடுத்திருக்கிறார். ஆனால் அவ்வளவு நாள்விடுமுறை அளிக்க முடியாது என்று ஆணையர் கூறியிருக்கிறார். அத்துடன் மேலாளரை பார்க்குமாறும் தெரிவித்திருக்கிறார்.
ஆனாலும் சரஸ்வதி சில நாட்கள் விடுப்பு எடுத்ததாக தெரிகிறது. இதனால் நகராட்சி நிர்வாகம் அவரை சஸ்பென்ட் செய்து தபாலில் வீட்டுக்கு ஆர்டரை அனுப்பியுள்ளது. அதை சரஸ்வதி வாங்கவில்லை. இதனால் அவரது வீட்டில் சஸ்பென்ட் ஆர்டர் ஒட்டப்பட்டிருக்கிறது.
இந்த விவகாரத்தில்தான் நகராட்சி ஆணையர் அலுவலகத்தில் சரஸ்வதி தீக்குளிக்க முயற்சித்திருக்கிறார் என்று தெரியவந்துள்ளது.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications