தமிழக மீனவர்களின் படகு மீது பெட்ரோல் குண்டுவீச்சு: இலங்கை கடற்படை அட்டூழியம்
ராமநாதபுரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் சென்ற படகு மீது இலங்கை கடற்படையினர் பெட்ரோல் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ராமேஸ்வரத்தில் உள்ள தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருக்கையில் இலங்கை கடற்படையினர் அங்கு வந்துள்ளனர். இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் 5 பேர் இருந்த படகு மீது பெட்ரோல் குண்டுகளை வீசித் தாக்கினர்.

இந்த சம்பவத்தில் அந்த 5 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் படகில் எரிந்த தீயை அணைத்து அதை கரைக்கு கொண்டு வந்தனர். இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது பாட்டில்கள் மற்றும் கட்டைகளை எறிந்து விரட்டியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் பற்றி க்யூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரதமர் மோடி இலங்கை செல்வதையொட்டி நல்லெண்ண அடிப்படையில் 86 இந்திய மீனவர்களை விடுவிப்பதாக இலங்கை அறிவித்துள்ளது.
இந்நிலையில் தான் தமிழக மீனவர்களின் படகு மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications