தமிழக சட்டசபை தேர்தல் வேட்புமனு தாக்கல் முடிந்தது: 234 தொகுதிகளில் 5268 பேர் போட்டி
சென்னை: தமிழகத்தில் வருகிற மே 16ம் தேதி நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று முடிவடைந்தது. மொத்தம் 5268 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
தமிழக சட்ட சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22ம் தேதி தொடங்கியது. முதல் இரண்டு நாள்களில் சேர்த்து 861 பேரும், மூன்றாம் நாளான செவ்வாய்க்கிழமை 191 பேரும் மனு தாக்கல் செய்தனர். புதன்கிழமை வரையில் மொத்தமாக 2 ஆயிரத்து 112 மனுக்கள் அளிக்கப்பட்டிருந்தன.

தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய இன்று, வெள்ளிக்கிழமை கடைசி நாளாகும். நேற்றைய தினம் அதிமுகவைச் சேர்ந்த 233 வேட்பாளர்களும் மனுக்களை தாக்கல் செய்தனர்.
ஏப்30ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளான மே2ஆம் தேதியே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 16ம் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 19ம் நடைபெறும் அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே இன்று மதியம், 2.30 மணியோடு வேட்பு மனு தாக்கல் முடிவடைந்தது. புதுச்சேரி, கேரள மாநிலங்களிலும் வேட்புமனு தாக்கல் இன்றோடு முடிவடைந்தது.
தமிழகத்தில் மொத்தம் 5268 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதில் சென்னையில் உள்ள தொகுதிகளில் மொத்தம் 336 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் 228 பேரும், நெல்லை மாவட்ட தொகுதிகளில் 221 பேரும், கோவை மாவட்ட தொகுதிகளில் 229 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இதில் பெண்கள் 572 பேராகும். மூன்றாம் பாலினத்தை சேர்ந்த திருநங்கைகள் 2 பேர் களத்திலுள்ளனர். இதில் ஒருவர் ஆர்.கே.நகரிலும், மற்றொருவர் மதுரை தெற்கு தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.
திருப்பூர் தெற்கு தொகுதியில் அதிகபட்சமாக 43 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். திண்டிவனம் மற்றும் பேராவூரணி தொகுதிகளில் குறைந்த அளவாக தலா 8 பேர் களத்தில் உள்ளனர்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications