அபிராமிக்கு சிறையிலேயே முடிவு தெரிந்தாக வேண்டும்.. வக்கீல் ரூபத்தில் வந்த வில்லங்கம்!!
கள்ளக்காதலனுடனான உல்லாச வாழ்க்கைக்காக பெற்ற குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு எதிராக சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: கள்ளக்காதலனுடனான உல்லாச வாழ்க்கைக்காக பெற்ற குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு எதிராக சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்காதல், காமவெறி உள்ளிட்டவற்றிற்கு அடிமையான அபிராமி கடந்த 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் தனது இரண்டு குழந்தைகளை துடிதுடிக்க கொலை செய்தார்.
கணவரை கொல்ல அவர் போட்ட சதித்திட்டம் தோல்வியில் முடிந்ததால் 31ஆம் தேதி இரவு முதல் ஒன்றாம் தேதி அதிகாலை வரை கள்ளக்காதலனோடு ஜாலியாக இருந்துவிட்டு நாகர்கோவிலுக்கு தப்பினார்.

பெரும் அதிர்வலைகள்
அவரை கள்ளக்காதலனை வைத்தே கைது செய்தது போலீஸ். தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் அபிராமி. காமவெறியில் பெற்ற குழந்தைகளை அவர் கொன்ற சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

உள்நோக்கம் இல்லை
இந்நிலையில் அபிராமிக்கு எதிராக வழக்கறிஞர் தமிழ்வேந்தன் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, இந்தப் புகார் மனுவில் எனக்கு எந்தவித உள்நோக்கமும் கிடையாது.

குண்டர் தடுப்பு சட்டம்
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் தவறான நட்பால் கொலைகளும் தமிழகத்தில் தொடர்ந்து நடக்கின்றன. குறிப்பிட்ட சில வழக்குகளுக்கு மட்டுமே குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

2 குழந்தைகள் கொலை
இதுபோன்ற குற்றங்கள், சமூக சீர்கேட்டுக்குக் காரணமாக உள்ளது. சமீபத்தில் குன்றத்தூரில் அபிராமி என்ற பெண், தன்னுடைய இரண்டு குழந்தைகளை ஈவு இரக்கமின்றி கொலை செய்துள்ளார்.

இரும்புக்கரம் கொண்டு
எனவே, இந்தக் குற்றங்களை இரும்புக் கரம் கொண்டு போலீஸார் தடுக்க வேண்டும். எனவே, குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காமவெறிக்கு முடிவு
அவரை ஜாமீனில் விடுவிக்கக் கூடாது. கைதானவர்கள் சிறைக்குள் இருக்கும் நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து கடும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். அபிராமியின் காமவெறிக்கு முடிவுகட்டும் வகையில் வழக்கறிஞர் தமிழ்வேந்தன் இந்த புகாரை அளித்துள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications