For Daily Alerts
Just In
விடாமல் போராடும் மாணவர்கள்... அண்ணாமலை பல்கலை.க்கு 22ம் தேதி வரை விடுமுறை
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களும் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக பல்கலைக்கழகத்துக்கு வரும் 22ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் பல்கலைக்கழகத்துக்கு வரும் 22ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக நிர்வகாம் தெரிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி தமிழகத்தில் பெரும்பாலான கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. சென்னை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு பகலாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவாகவும் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரியும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாணவர்களின் போராட்டம் காரணமாக பல்கலைக்கழகத்துக்கு வரும் 22ஆம் தேதி வரை விடுமுறை விடப்படுவதாக பல்கலைக் கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
Comments
chidambaram annamalai university two leaves jallikattu protest students protest சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் விடுமுறை ஜல்லிக்கட்டு போராட்டம் மாணவர்கள் போராட்டம்
English summary
Leave for Chidambaram Annamalai University till 22nd January. due to Students protest The university administrations have decided to announce leave
Story first published: Wednesday, January 18, 2017, 18:18 [IST]