விடாமல் போராடும் மாணவர்கள்... அண்ணாமலை பல்கலை.க்கு 22ம் தேதி வரை விடுமுறை
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களும் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக பல்கலைக்கழகத்துக்கு வரும் 22ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் பல்கலைக்கழகத்துக்கு வரும் 22ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக நிர்வகாம் தெரிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி தமிழகத்தில் பெரும்பாலான கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. சென்னை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு பகலாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவாகவும் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரியும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாணவர்களின் போராட்டம் காரணமாக பல்கலைக்கழகத்துக்கு வரும் 22ஆம் தேதி வரை விடுமுறை விடப்படுவதாக பல்கலைக் கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications