For Daily Alerts
Just In
சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை.. வெள்ளக்காடாக காட்சியளிக்கும் புறநகர்
தமிழகத்தில் சில இடங்களில் அதீத மழை பெய்யும் என்பதால் இன்று ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கனமழையால் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. இதனால் தாம்பரம், முடிச்சூர், பெருங்களத்தூர் ஆகிய பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
Newest First Oldest First
கடலூர், சிதம்பரம், வடலூர் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.
அரியலூர், ராமநாதபுரம், பெரம்பலூர், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை.
தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு.
தொடர் மழை காரணமாக 6 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூர் பகுதியில் வீடு இடிந்து 15 பேர் பலி;
மேட்டுப்பாளையம் அருகே வீடு இடிந்ததில் 10 பெண்கள், இரு குழந்தைகள், 3 ஆண்கள் உள்பட 15 பேர் பலி;
கோவை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்தது;
மேட்டுப்பாளையம் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வந்தது
சென்னை, திருவள்ளூரில் மீண்டும் கனமழை.
கிண்டி, பல்லாவரம், தாம்பரம், முகப்பேர், அண்ணாநகர் பகுதிகளில் கனமழை.
நங்கநல்லூர், மந்தைவெளி, அடையாறு, பெரம்பூர், வில்லிவாக்கம், திநகர் பகுதிகளில் மழை.
மீனம்பாக்கம், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை.
திருவள்ளூரிலும் மீஞ்சூர், மணலி, மாதவரம், கொளத்தூர், பாடி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது
READ MORE
Comments
English summary
Live Updates: All regions in TN hit with heavy rain for the past two days.