For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை.. வெள்ளக்காடாக காட்சியளிக்கும் புறநகர்

தமிழகத்தில் சில இடங்களில் அதீத மழை பெய்யும் என்பதால் இன்று ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கனமழையால் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. இதனால் தாம்பரம், முடிச்சூர், பெருங்களத்தூர் ஆகிய பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

Newest First Oldest First
9:14 AM, 3 Dec

கடலூர், சிதம்பரம், வடலூர் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை. அரியலூர், ராமநாதபுரம், பெரம்பலூர், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை. தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு. தொடர் மழை காரணமாக 6 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை.
9:14 AM, 3 Dec

காஞ்சிபுரம் அருகே தென்னேரியில் வெள்ளப்பெருக்கு. வாலாஜாபாத்- சுங்குவார்சத்திரம் சாலை இடையே போக்குவரத்து துண்டிப்பு. ஜம்போடை, கூத்தவாக்கம் ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. 15-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் பாதிப்பு.
9:13 AM, 3 Dec

கடலூர் கல்வி மாவட்டத்தில் சிதம்பரம், வடலூர் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை. அரியலூர், ராமநாதபுரம், பெரம்பலூர், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை
9:13 AM, 3 Dec

தூத்துக்குடி, திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு. தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு.
9:13 AM, 3 Dec

தொடர் மழை காரணமாக 8 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை
9:12 AM, 3 Dec

சென்னையில் மீண்டும் கனமழை. தென்சென்னையின் புறநகர் பகுதிகளில் வெளுத்தெடுக்கும் மழை. தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், முடிச்சூர் பகுதிகளில் கனமழை. கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
8:08 PM, 2 Dec

செங்கல்பட்டு மாவட்டத்தில் 10 கிராமங்களுக்கு வெள்ள எச்சரிக்கை
8:08 PM, 2 Dec

குருவன்மேடு, ரெட்டிபாளையம், பாலூர், ஆத்தூர், திம்மாவரம் உள்ளிட்ட கிராமங்களுக்கு எச்சரிக்கை
5:51 PM, 2 Dec

சுவர் இடிந்து உயிரிழந்த 17 பேர் உறவினர்கள் மேட்டுப்பாளையத்தில் போராட்டம்; அரசு மருத்துவனையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸ் தடியடி
2:04 PM, 2 Dec

கிடுகிடுவென நிரம்பி வழியும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள்- வெதர்மேன்
2:04 PM, 2 Dec

ஏரிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் வரும் கோடையில் தண்ணீர் பிரச்சினை இருக்காது
2:04 PM, 2 Dec

தண்ணீர் பிரச்சினை இருக்காது என குட் நியூஸ் சொன்னார் வெதர்மேன்
12:48 PM, 2 Dec

அடுத்த 24 மணிநேரத்தில் 15 மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு- சென்னை வானிலை மையம்
12:48 PM, 2 Dec

தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை
11:05 AM, 2 Dec

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வீடு இடிந்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 17ஆக உயர்வு
9:36 AM, 2 Dec

பெரம்பலூர் மாவட்டம் பச்சமலையில் கனமழை பெய்து வருகிறது; பச்சமலையில் கனமழையால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது; காட்டாற்று வெள்ளத்தால் 10 கிராமங்கள் துண்டிப்பு; தாழை நகரில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் சாலைகளில் தஞ்சம்
8:49 AM, 2 Dec

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூர் பகுதியில் வீடு இடிந்து 15 பேர் பலி; மேட்டுப்பாளையம் அருகே வீடு இடிந்ததில் 10 பெண்கள், இரு குழந்தைகள், 3 ஆண்கள் உள்பட 15 பேர் பலி; கோவை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்தது; மேட்டுப்பாளையம் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வந்தது
8:46 AM, 2 Dec

ஆனால் நேற்று இரவுடன் கனமழை முடிவுக்கு வந்தது; கடலூர், டெல்டா பகுதிகளில் சில இடங்களில் மழை பெய்யலாம்; ஏரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்துள்ளது- வெதர்மேன்; மேட்டுப்பாளையத்தில் 180 மி.மீ மழை பதிவாகியுள்ளது
8:46 AM, 2 Dec

மிகப் பெரிய மழை நேற்று இரவுடன் முடிவுக்கு வந்தது- தமிழ்நாடு வெதர்மேன்; சென்னை,காஞ்சி, திருவள்ளூர் பகுதியில் நேற்று இரவு கனமழை பெய்தது; நேற்று இரவு பெய்த மழை இன்றும் தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது;
7:51 AM, 2 Dec

நாளை முதல் மழை படிப்படியாக குறையும்- சென்னை வானிலை மையம்
7:51 AM, 2 Dec

சென்னையில் மிதமானது முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு; தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது
7:50 AM, 2 Dec

கடலூர், விழுப்புரம், தேனி, விருதுநகர், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் அதீத மழைக்கு வாய்ப்பு
7:32 AM, 2 Dec

செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், கடலூர், ராமநாதபுரம், நாகை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டுமே விடுமுறை
7:32 AM, 2 Dec

சென்னை, தூத்துத்துக்குடி, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
7:32 AM, 2 Dec

கனமழையால் இன்று 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
8:55 PM, 1 Dec

சென்னையில் நாளை பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு. சென்னை பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி விடுமுறை அறிவித்தார். தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக விடுமுறை அறிவிப்பு
8:06 PM, 1 Dec

தொடர் மழையால் புதுச்சேரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
7:53 PM, 1 Dec

சென்னை பல்கலை.யின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த தேர்வு ஒத்திவைப்பு. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவிப்பு
7:42 PM, 1 Dec

கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் அறிவிப்பு
7:42 PM, 1 Dec

சென்னை, திருவள்ளூரில் மீண்டும் கனமழை. கிண்டி, பல்லாவரம், தாம்பரம், முகப்பேர், அண்ணாநகர் பகுதிகளில் கனமழை. நங்கநல்லூர், மந்தைவெளி, அடையாறு, பெரம்பூர், வில்லிவாக்கம், திநகர் பகுதிகளில் மழை. மீனம்பாக்கம், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை. திருவள்ளூரிலும் மீஞ்சூர், மணலி, மாதவரம், கொளத்தூர், பாடி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது
READ MORE

Live Updates: All regions in TN hit with heavy rain
English summary
Live Updates: All regions in TN hit with heavy rain for the past two days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X