புதிய அட்டவணையை வெளியிட்டு டிசம்பரில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த ஹைகோர்ட் உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை: உள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய அட்டவணையை வெளியிட்டு டிசம்பரில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பின் போது வார்டுகள் ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை; சுழற்சி முறையில் இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்பது திமுகவின் குற்றச்சாட்டு.

இது தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், அக்டோபர் 17, 19-ந் தேதிகளில் நடைபெற இருந்த உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும் சுழற்சி முறை இடஒதுக்கீடு உள்ளிட்ட விவரங்களுடன் புதிய அட்டவணையை வெளியிட்டு டிசம்பரில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவும் உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications