கேரளாவில் இருந்து நெல்லைக்கு வந்த கோழி கழிவு: மக்கள் திரண்டதால் லாரி டிரைவர் ஓட்டம்
நெல்லை: கேரளாவில் இருந்து பட்டப்பகலில் கோழி கழிவுகளை ஏற்றி வந்த லாரியை நெல்லையில் பொதுமக்கள் முற்றுகையிட்டதால் லாரி டிரைவர் ஓட்டம் பிடித்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரளாவில் இருந்து கோழி கழிவுப் பொருட்கள் அவ்வப்போது சட்டவிரோதமாக லாரிகளில் தமிழகத்திற்கு கொண்டு வந்து கொட்டப்படுகிறது, சில நேரங்களில் இவை

நெல்லை, குமரி மாவட்டங்களில் ஆள் நடமாட்டம் இல்லாத மற்றும் நான்கு வழி சாலையோரம் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் இப்படி கேரளாவில் இருந்து சட்டவிரோதமாக கோழி இறைச்சி கழிவுகளை ஏற்றி வரும் லாரிகளை தடுத்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இருப்பினும் போதிய கண்காணிப்பு தொடர்ந்து இல்லாததால் அத்துமீறல் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில் பட்டப்பகலிலேயே கேரளாவில் இருந்து இறைச்சி கழிவுகளை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி நெல்லையை கடந்து தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. பாளையை அடுத்துள்ள பாறைகுளம் அருகே சென்ற போது திடீரென லாரியின் டயர் பஞ்சராகியது. லாரி நின்ற பகுதியில் கடும் தூர்நாற்றம் வீசியதுடன் அதில் இருந்து கழிவு ரத்தம் சாலையில் வழிந்தோடியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் லாரி அருகே திரண்டு வந்தனர்.
பொதுமக்கள் திரண்டு வருவதை பார்த்த லாரி டிரைவர் பின்புறமாக குதித்து தப்பி ஓடினார். இது குறித்து அப்பகுதி மக்கள் போலீசாருககு தகவல் தெரிவித்தனர். லாரி வந்த பகுதியில் பல சோதனைச் சாவடிகள் உள்ளன. அவற்றை கடந்து லாரி எப்படி வந்தது என்பது புரியாத புதிராக இருக்கிறது. கேரளாவில் இருந்து பட்டப்பகலிலேயே பல சோதனைச் சாவடிகளை கடந்து லாரியில் கோழி கழிவுகளை கொண்டு வந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications