ரூபாய் 500 கோடி பணத்துடன் ரிப்பேராகி நின்ற கண்டெயினர் லாரி... மதுரை அருகே பரபரப்பு
மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பல கோடி பணத்துடன் வந்த கண்டெய்னர் லாரி ஒன்று நடுவழியில் பழுதாகி நிற்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்தடுத்து கண்டெய்னர் லாரிகள் சாலைகளில் அதிரடியாக நின்று பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

சட்டசபைத் தேர்தல் சமயத்தில் திருப்பூர் அருகே ரூ. 570 கோடி பணத்துடன் மூன்று கண்டெய்னர் லாரிகள் பிடிபட்டன. அந்தப் பணம் யாருக்குச் சொந்தம் என்ற பிரச்சினை வெடித்ததைத் தொடர்ந்து, அந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகின்றனர்.
இதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன்னர் 700 கோடி பணத்துடன் விழுப்புரம் அருகே நின்ற கண்டெய்னர் லாரிகளால் பரபரப்பு ஏற்பட்டது. 5 தனியார் வங்கிக்கு சொந்தமான அப்பணம் பின்னர் சென்னக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டது
இந்நிலையில், இன்று மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சாலையில் கள்ளிக்குடி பகுதியில் பல கோடி பணத்துடன் வந்த கன்டெய்னர் லாரி ஒன்று நடுவழியில் பழுதாகி நின்று கொண்டிருக்கிறது.
ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான இந்தப் பணம் மைசூரிலிருந்து திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்லும் வழியில் லாரி பழுதடைந்ததாக கூறப்படுகிறது. போலீசார் சோதனையில் ரூபாய் 500 கோடி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து செய்திகளில் கண்டெய்னர் லாரி குறித்த செய்திகள் அடிபட்டு வருவதால், இந்த லாரிகளை வேடிக்கைப் பார்க்க அப்பகுதி மக்கள் திரண்டனர். இதனால், அதுவரை அமைதியாக இருந்த சி.ஐ.எஸ்.எப். சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான 10 கமாண்டோ போலீசார் 2 கண்டெய்னர் லாரிகளையும் சுற்றி நின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
லாரிக்கு திருமங்கலம் டிஎஸ்பி சங்கர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
லாரியின் பழுதை நீக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications