ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டவர்கள் ஓட்டு போடலையே: தமிழிசை சவுந்தரராஜன்
சென்னை: வாக்குச்சாவடி வரைக்கும் அடாவடி அரசியல் நடக்கும்போது அடிதட்டு மக்களின் நலனுக்காக நேர்மையாக போட்டியிடும் கட்சிகளின் நேர்மை நிறைவடையாமல் போகிறது என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் தங்களின் வாக்கு வங்கி குறையவில்லை என்ற மகிழ்ச்சியில் உள்ளார் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா. விருகம்பாக்கத்தில் போட்டியிட்ட பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் டெபாசிட் இழந்தார்.
இந்நிலையில் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறுகையில்,

தேர்தல்
மக்கள் பெரிதும் எதிர்பார்த்த சட்டசபை தேர்தல் முடிந்துவிட்டது. தேர்தல் களத்தில் இறங்கி வேலைபார்த்த பாஜக தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவருக்கும் எனது பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

வாழ்த்துக்கள்
மக்கள் புதிய ஆட்சியை தேர்வு செய்துள்ளனர். புதிய ஆட்சிக்கு தலைமை ஏற்கும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒற்றுமை
மாற்று அரசியலை முன் வைக்க விரும்பிய தலைவர்கள் முதலில் ஒற்றுமையை முன்வைக்க தவறியதால் தோல்வி அடைந்துள்ளனர். தமிழகத்தில் மாறுதலை ஏற்படுத்த நினைத்தது பாஜக. ஆனால் அது முடியாமல் போனது. அதற்காக பாஜகவினர் சோர்ந்துவிட மாட்டார்கள்.

அடாவடி அரசியல்
பண பலமும், அதிகார பலமும் வலம் வருகையில் மற்றவர்களால் அதிக இடங்களை பிடிக்க முடியாமல் போகிறது. வாக்குச்சாவடி வரைக்கும் அடாவடி அரசியல் நடக்கும்போது அடிதட்டு மக்களின் நலனுக்காக நேர்மையாக போட்டியிடும் கட்சிகளின் நேர்மை நிறைவடையாமல் போகிறது.

ஃபேஸ்புக்
மேல் தட்டு மக்களின் மேன்மையான ஓட்டுகள் கிடைக்காததால் மேம்பாடான மாற்றத்தை கொண்டு வர முடியவில்லை. ஃபேஸ்புக்கில் போஸ்ட் போடுபவர்கள் விரல் நுனியில் மையிட்டுக் கொள்ளாததால் பொய் கூறும் கட்சிகளே அதிக இடங்களை பெறுகிறது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications