சென்னை பூவிருந்தவல்லியில் காதல் தம்பதி தற்கொலை: 2 பிஞ்சு பெண் குழந்தைகளை விட்டுச்சென்ற பரிதாபம்!
சென்னை பூவிருந்தவல்லியில் காதல் தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video

சென்னை: பூவிருந்தவல்லியில் வசித்து வந்த வெங்கடேசன், துர்கா தம்பதியினர் காதல் திருமணம் செய்தவர்கள். இத்தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.
குடி பழக்கம் இருக்கும் வெங்கடேசன் மனைவி துர்காவிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. தாய் இல்லாத பெண்ணான துர்கா தனது பாட்டி மீரா பாய்யிடம் குழந்தைகளை விடுவது வழக்கம்.

அந்த வகையில் குழந்தைகளை மீண்டும் துர்காவிடம் விடுவதற்காக அதிகாலையில் மீரா பாய் வந்திருந்தார். அவர் நீண்ட நேரம் கதவுகளை தட்டியும் திறக்கப்படாததால் ஜன்னல் வழியாக பார்த்தார்.
[பிறந்தநாளில் காதலனால் சுட்டுக்கொல்லப்பட்ட காதலி.. விசாரணையில் அம்பலமான திடுக் தகவல்! ]
அப்போது வெங்கடேசன் தூக்கில் தொங்கியபடியும் துர்கா கட்டிலில் சடலமாகவும் கிடந்தனர். இதனைக் கண்டு கத்தி கூச்சலிட்டார் மீராபாய். இதைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர்.
இதனையடுத்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்குவந்த காவல்துறையினர் கதவை உடைத்து இருவரது உடலையும் மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இருவரும் தற்கொலை செய்து கொள்வதற்கு என்ன காரணம் என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர். உலக பெண்குழந்தைகள் நாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் விவரம் தெரியாத இரண்டு பெண் குழந்தைகளை விட்டுவிட்டு பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்!












Click it and Unblock the Notifications