தென்கிழக்கு அரபிக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
தென்கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video

சென்னை: தென்கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று மூன்றாவது நாளாக மழை நீடிக்கிறது. விடிய விடிய கொட்டும் மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தொடர் மழையால் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார்.

கனமழை பெய்துள்ளது
அப்போது அவர் தெரிவித்ததாவது, தென் தமிழக பகுதியில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக கடந்த 24 மணி நேரம் தமிழகம், புதுச்சேரியில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. ஒருசில இடங்களில் கனமழையும் பெய்துள்ளது.

8ஆம் தேதி வரை நீடிக்கும்
இந்நிலையில் அக்டோபர் 8ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும். ஒருசில இடங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும்.

புயலாக மாறும்
இதனிடையே தென் கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 2, 3 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் புயலாக மாறும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
பின்னர் இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து ஓமன் நோக்கி செல்லும். இதனால் கடலில் பலத்த காற்று வீசும் மற்றும் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் அக்டோபர் 8ஆம் தேதி வரை அரபிக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு
-
இடி, மின்னலுடன் கனமழை.. ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்! மக்களே உஷார் -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications