இது "மொக்க" காற்றழுத்தம் பாஸ்.. வேலைக்கு ஆகாதாம்.. சொல்கிறார் வெதர்மேன்!
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத்தால் எதிர்பார்த்த அளவுக்கு மழை இருக்காது என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத்தால் எதிர்பார்த்த அளவுக்கு மழை இருக்காது என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். அது ஒரு மொக்க காற்றழுத்தம் என்றும் அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அண்மையில் வங்கக்கடலில் உருவான ஓகி புயல் கன்னியாகுமரி நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அளவுக்கு கனமழையை கொடுத்தது. அதேபோல் பலத்த காற்றால் கன்னியாகுமரி மாவட்டத்தையும் சூறையாடியது.
இதன் தாக்கத்தில் இருந்து கன்னியாகுமரி இன்னும் மீளாத நிலையில் வங்கக்கடலில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்தது. மேலும் இது புயலாக மாற வாய்ப்புள்ளதாக கூறிய வானிலை மையம் வட தமிழகம் மற்றும் தெற்க ஆந்திரா இடையே கரையை கடக்கலாம் என்றும் கூறியது.

மக்கள் எதிர்பார்ப்பு
இதன் காரணமாக சென்னை உட்பட வடதமிழகத்தில் மீண்டும் கன மழையும் பெய்யும் என்றும் கூறப்பட்டது. இதனால் மக்கள் பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.

மொக்க காற்றழுத்தம்
இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த காற்றழுத்த தாழ்வுநிலை குறித்து பதிவிட்டுள்ளார். அதில் இந்த காற்றழுத்தம் ஒரு மொக்க காற்றழுத்தம் என அவர் தெரிவித்துள்ளார்.

புயலாக மாற வாய்ப்பு
அதில் வங்கக்கடலில் உருவாகியுள்ள இந்த குறைந்த காற்றழுத்தம் நாளைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் அது புயலாக மாறும் வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

அச்சப்படத் தேவையில்லை
இதனால் வரும் நாட்களில் செயற்கைகோள் படத்தில் பெரும் மேகக்கூட்டத்தை காணலாம் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் அதனால் அச்சப்படத் தேவையில்லை என்றும் தமிழ்நாடு வெதர் மேன் தெரிவித்துள்ளார்.

மொக்கையாக பலவீனமடையும்
ஆந்திர கடற்பகுதியை நெருங்கும் போது அசாதாரண காரணங்களால் இந்த காற்றழுத்தம் மொக்க காற்றழுத்தமாக பலவீனமடையும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தனது பதிவில் தெரிவித்துள்ளார். ஆந்திரா நோக்கி நகரும்போது அதிர்ஷ்டவசமாக நமக்கு ஒரு நாள் மழை கிடைக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

எலும்புக்கூடாகதான் இருக்கும்
மேலும் ஆந்திராவை நெருங்கும் போது இந்தப்புயல் வெறும் எலும்புக்கூடாகதான் இருக்கும் என்றும் கூறினார். இந்த புயலால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் மக்கள் அவர்களின் அன்றாட வேலைகளை தொடராலாம் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

ஐஎம்டி அறிவிப்புகள்
கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். மேலும் இது தனது தனிப்பட்ட விளக்கம் என்றும் இதனால் எந்த குழப்பமும் ஏற்படாது என்றும் கூறியுள்ளார். மேலும் இந்திய வானிலை மையத்தின் அறிவிப்புகளை மக்கள் பின்பற்றி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications