மூடப்பட்ட 1500 டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க முயற்சிப்பதா?: ஜவாஹிருல்லா கண்டனம்
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறுவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த அத்துமீறிய நடவடிக்கையை தமிழக அரசு உடனே கைவிட வேண்டும் என்று ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
சென்னை: மூடப்பட்ட 1500 மதுக்கடைகளை திறக்கும் நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரி மனிதநேய மக்கள் கட்சி உட்பட பல்வேறு கட்சிகளும் பொதுமக்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் படிப்படியாக மதுவிலக்கு அமலாக்கப்படும் எனும் வாக்குறுதியுடன் ஆட்சி பொறுப்பேற்ற அதிமுக அரசின் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தனது 2016-ம் ஆண்டின் ஆட்சி துவக்கத்தின் முதல் மூன்று உத்தரவுகளில் ஒன்றாக 500 மதுபானக் கடைகளை மூட உத்தரவிட்டதோடு கடைகள் இரண்டு மணி நேரம் தாமதமாக திறக்கும் வகையில் உத்தரவிட்டிருந்தார்.

அப்போதே அந்த உத்தரவுகளை வருமானம் குறைவான கடைகளை மட்டும் மூடியதன் மூலம் உத்தரவின் நோக்கத்தை முனை மழுங்கச் செய்தது தமிழக அரசு.
இதற்கிடையே குடித்துவிட்டு வாகனம் ஓட்டி ஏற்படும் விபத்துகள் காரணமாக உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் தமிழகத்தில்தான் அதிகமாக உள்ள நிலையில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் தேசிய, மாநில நெடுஞ்சாலையில் உள்ள மதுக்கடைகளை ஏப்ரல் ஒன்றாம் தேதிக்கு முன் அகற்றப்பட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இதனால் பெரும்பாலான மதுக்கடைகள் மூடப்பட்டு அதன் தொடர்ச்சியாக படிப்படியாக பூரண மதுவிலக்கை நோக்கி தமிழகம் சென்று கொண்டிருப்பதாக நாம் எதிர்பார்திருந்த வேளையில் நேற்று தமிழக அரசின் நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ் அனுப்பியுள்ள கடிதம் ஒன்றின் மூலம் பல்வேறு தேசிய/மாநில நெடுஞ்சாலைகளை மாநகர/நகர சாலைகளாக வகைமாற்றம் செய்து 25-ம் தேதிக்குள் தீர்மானம் நிறைவேற்ற மாநகராட்சி/நகராட்சிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் மூடப்பட்ட 1500 டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு முயற்சி மேற் கொண்டுள்ளது என்பது அதிர்ச்சி அளிக்கிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி/நகராட்சி மன்றங்கள் இல்லாத சூழலில், அப்பட்டமான பொய்க் காரணங்களை கற்பித்து அதிகாரிகள் மூலம் தேசிய/மாநில/மாவட்ட முக்கிய சாலைகளை மாநகராட்சி/நகராட்சி சாலைகளாக வகைமாற்றம் செய்ய முயலுவது சட்டவிரோத செயலாகும்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறுவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த அத்துமீறிய நடவடிக்கையை தமிழக அரசு உடனே கைவிட வேண்டும். சட்ட விரோதமாக வகைமாற்றம் செய்யப்படும் சாலைகளில் மதுகடைகள் அமைக்கப்பட்டால் அவை அப்புறப்படுத்தும் வரை மனிதநேய மக்கள் கட்சி இடைவிடாத போராட்டத்தை நடத்தும். இவ்வாறு ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications