என் பெற்றோர்கள் மீதான அக்கறைக்கு நன்றி... பிரதமர் மோடிக்கு அழகிரி கடிதம்
என் பெற்றோர் மீது நீங்கள் எடுத்துக்கொண்ட அதீத அக்கறைக்கு நன்றி என்று பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார் அழகிரி.
Recommended Video

சென்னை: என் பெற்றோரை உங்களுடன் வந்து இருக்குமாறு அழைப்பு விடுத்ததன் மூலம் அவர்களின் உடல்நல முன்னேற்றத்துக்கு கண்டிப்பாக ஊக்கமளிக்கும் என்று பிரதமருக்கு முன்னாள் அமைச்சர் அழகிரி கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்னை வந்திருந்தார். தினத்தந்தியின் பவள விழா மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரியின் மகள் திருமண விழா பங்கேற்ற மோடி கோபாலபுரம் சென்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார்.
தயாளுஅம்மாளையும் சந்தித்து பேசினார். ஓய்வெடுப்பதற்காக டெல்லியில் உள்ள தனது வீட்டுக்கு வருமாறு இருவரையும் மோடி அழைப்பு விடுத்தார்.

அழகிரி நன்றி கடிதம்
இதற்கு முன்னாள் அமைச்சர் மு.க. அழகிரி நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அவர் தனது கடிதத்தில் தனிப்பட்ட முறையில் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நேரில் வர இயலவில்லை
என் பெற்றோர்மீது நீங்கள் எடுத்துக்கொண்ட அதீத அக்கறைக்கு நன்றி. நீங்கள் என் பெற்றோரைப் பார்க்க வருவது எனக்கு முன்கூட்டியே தெரியாததால், உங்களை நேரில் வரவேற்க என்னால் சென்னைக்கு வர இயலாமல்போனது.

உடல் நலம் முன்னேற்றமடையும்
நீங்கள் நேரில் வந்து என் பெற்றோரைப் பார்த்ததுடன், உங்களுடன் வந்து இருக்குமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்ததன் மூலம் அவர்களின் உடல் நல முன்னேற்றத்துக்கு கண்டிப்பாக ஊக்கமளிக்கும் என்று கூறியுள்ளார்.

அழகிரி பாராட்டு
இந்தியாவை புதிய உச்சத்துக்குக் கொண்டுசெல்லும் வகையில் நீங்கள் கொண்டுள்ள உறுதிப்பாடு மற்றும் எதிர்காலத் திட்டங்களுக்கு, என்னுடைய பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் அழகிரி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications