மக்கள் கருணாநிதியை 6வது முறையாக முதல்வராக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: தமிழகத்தில் திமுக தலைவர் கருணாநிதியை 6 ஆவது முறையாக முதல்வராக்க திமுகவினர் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடவேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

திருவாரூரில் திங்கள்கிழமை கிளை, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சிக் அப்பாற்பட்டவர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தை நிறைவு செய்த பின்னர் நடைபெற்ற பொது உறுப்பினர்கள் கூட்டத்துக்கு தலைமை வகித்து பேசினார் மு.க.ஸ்டாலின்.

மாணவர்களுக்கு முக்கியத்துவம்:

மாணவர்களுக்கு முக்கியத்துவம்:

அப்போது, "கூட்டத்தில் மாணவர்களாகிய நாங்கள் சமச்சீர்க் கல்வியில் பயன்பெற்றவர்கள், அதனால் திமுக மீது பற்றுக் கொண்டவராக இருக்கிறோம் என்றனர். தவிர கிளைக்கழகத்தில் மாணவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

திமுகவின் வெற்றி:

திமுகவின் வெற்றி:

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற வைப்போம் என்றும், மேல்நிலைப் பொறுப்பாளர்கள் தங்களை அரவணைத்துச் செல்ல வேண்டும், கட்சியில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

உரிய அங்கீகாரம்:

உரிய அங்கீகாரம்:

உண்மையாக உழைப்பவர்களுக்கு கட்சியில் உரிய அங்கீகாரம் கொடுக்க வேண்டும். அதிமுகவினரால் பிரச்னை ஏற்படும் போது உதவ வேண்டும், தேர்தல் காலங்களில் அதிக வாக்கு கள் பெற்றுக்கொடுப்பவர்களை பாராட்டி ஊக்கப்படுத்த வேண்டும், நிர்வாகிகள் கூட்டம் அடிக்கடி நடத்த வேண்டும்.

144 தடை உத்தரவு:

144 தடை உத்தரவு:

ஆய்வுக் கூட்டத்தில் பேசிய ஒருவர் 144 தடை உத்தரவினால் 2014 மக்களவைத் தேர்தலில் திமுக தோல்வியை சந்தித்தது என்று கூறினார். அது உண்மை தான், ஏனெனில் சட்ட ஒழுங்கு மோசமாக உள்ள நிலையில் தான் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படும்.

தேர்தல் கமிஷனோடு வெற்றி:

தேர்தல் கமிஷனோடு வெற்றி:

ஆனால் தேர்தல் கமிஷன், திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட எந்தக் கட்சியும் கோரிக்கை வைக்காத போது, ஏன் தேர்தலுக்கு முந்தைய நாள் 144 தடை உத்தரவு போட வேண்டும். அதற்கு காரணம் அதிமுக தேர்தல் கமிஷனோடு கூட்டணி வைத்து போட்டியிட்டது, அதனால் அக்கட்சி வெற்றிப் பெற்றது.

தோல்வியால் துவளவில்லை:

தோல்வியால் துவளவில்லை:

திமுகவுக்கு தேர்தல் வெற்றித் தோல்வி புதிதல்ல. இதுபோல் பல தேர்தல்களை சந்தித்துள்ளது. தோல்வியை கண்டு துவண்டு போகும் கட்சியல்ல. திமுக மக்களவைத் தேர்தலில் தோல்வியை சந்தித்தப் போதும், தற்போது எழுச்சியோடு, உணர்ச்சியோடு, ஆர்வத்தோடு, உற்சாகத்தோடு, ஊக்கத்தோடு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

மக்களின் கட்சி திமுக:

மக்களின் கட்சி திமுக:

தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி காட்சி ஆட்சியாக இருந்தது. தற்போது பொம்மை ஆட்சி நடக்கிறது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களைப் பற்றி சிந்திக்கும் ஒரே கட்சி திமுக தான்.

மீண்டும் முதல்வர்:

மீண்டும் முதல்வர்:

6 ஆவது முறையாக திமுக தலைவர் கருணாநிதியை முதல்வராக்க வேண்டுமென்பதை லட்சியமாகக் கொண்டு திமுக வினர் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்" என்று பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+