திராவிட இயக்கத்தை உருவாக்கி - பாடுபட்டோர் பட்டியலில் என் பெயர் இருக்கும்
இன்று நேற்றல்ல, நம்முடைய கழகத்தினுடைய பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்களைச் சந்தித்த அந்தக் காலம் தொட்டு, 1941, 42ல் திருவாரூரில் திராவிட முன்னேற்றக் கழகத்தை அந்தத் தேதியிலே தொடங்காவிட்டாலும், திராவிடர்களுடைய எழுச்சியை, திராவிடர்களுடைய உணர்ச்சியை உருவாக்க வேண்டும் என்ற பெரியாருடைய எண்ணங் களுக்கு வலிவு சேர்க்கின்ற வகையிலே அன்றைக்கே மாணவர் இயக்கம், இளைஞர் இயக்கம் இவைகளை யெல்லம் உருவாக்கிப் பாடுபட்ட அந்தப் பட்டியலிலே என்னுடைய பெயர் உண்டு.
அப்பொழுது இவர்களுடைய பெயரெல்லாம் கிடையாது. அப்பொழுது இவர்களைப் பற்றி யாருக்கும் தெரியாது. றிஞர் அண்ணா அவர்கள் சொல்வார்கள், தண்டவாளத்தில் தலை வைத்துப் படு என்று சொன்னாலும்; அமைச்சர் பதவியை ஏற்றுக் கொள் என்று சொன்னாலும், இரண்டையும் சமமாகக் கருதுகிறவன்தான் என்னுடைய தம்பி கருணாநிதி என்று அண்ணா அவர்கள் சொன்னார்கள். அதை விடவா ஜெயலலிதா எனக்குக் கொடுக்கின்ற பட்டம் பெரிது? அதை விடவா இந்தப் புகழுரை பெரிது? அதைவிடவா இந்தப் பாராட்டு எல்லாம் எனக்குப் பெரிது?.

என்னை தீய சக்தி என்கிறார் ஜெயலலிதா. தம்பி துரைமுருகன் வருத்தப்பட்டார். கனல் கக்க அதை மறுத்துப் பேசினார். நான் தீய சக்தியா, நீ தீய சக்தியா என்பது நாட்டுக்குத் தெரியும்.
நான் இந்த வயதிலும், ஜெயலலிதா போன்றவர்களால் தீய சக்தி என்று வர்ணிக்கப்படுகின்ற அளவிற்கு தொண்டாற்றிக் கொண்டிருக்கிறேன் என்றால் யாருக்கு நான் தீய சக்தியாகத் தெரிகிறது? யாருடைய கொடூரமான செயல்களால், யாருடைய நச்சுத் திட்டங்களால், யாருடைய நாட்டை அழிக்கின்ற செயல்களால், தமிழ்நாட்டு மக்கள் அல்லல்படுகிறார்களோ, தமிழ் நாட்டு மக்கள் அவதிப்படுகிறார்களோ, அவர்களை யெல்லாம் அத்தகைய செயல்களிலிருந்து காப்பாற்ற, அவர்கள்மீது நெருப்பை உமிழ வேண்டும் என்று சொன்னாலும், அப்படிப்பட்ட சக்திகள் மீது நெருப்பை உமிழவும், அப்படிப்பட்ட காரியங்களிலே, நானே என்னை பலி கொடுத்துக் கொள்ள வேண்டும் என்றாலும், அதற்குத் தயாராகவும் இருப்பவன்தான் இந்தக் கருணாநிதி என்பதை நான் அவர்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.












Click it and Unblock the Notifications