கடைசி மூச்சுவரை தமிழ் மக்களுக்காகவே பாடுபடுவேன் - கருணாநிதி

எனக்கு வாக்களிக்காமல் இருக்க வேண்டுமென்று அன்பு வேண்டுகோள் விடுக்கிறார் அம்மையார். என்ன காரணங்களைச் சொல்லி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
நான் திருவாரூரில் ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள்; நீ தேடி வந்த கோழையுள்ள நாடு இதல்லவே"" என்று முழங்கி, கையிலே புலி, வில், கயல் பொறித்த தமிழ்க் கொடியைப் பிடித்துக் கொண்டு, இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலே ஈடுபட்ட காலத்தில்; பிறக்கக் கூட இல்லை இந்த அம்மையார். அவர்களுக்கு என்னைப் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்ற அளவிற்கு தைரியம் வந்திருக்கிறது. எண்ணம் வாய்த்திருக்கிறது. நான் நன்றி கூறிக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டு மக்களல்ல, எல்லா மக்களுமே என்னைப் புறக்கணித்தாலும்கூட, நான் செய்த காரியங்களை, நான் ஆற்றியப் பணிகளை, நான் ஈடுபட்ட போராட்டங்களையெல்லாம் கவலைப்படா மல் மறந்துவிட்டு இன்றைக்கு மக்கள் நம்மைப் புறக்கணித்து விட்டார்கள் என்றால், இப்படி ஒரு ஓய்வு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு என்றைக்கும் ஏற்படாது. அந்த ஓய்வை அவர்கள் தரமாட்டார்கள். நான் இந்த உடலிலே உயிர் ஒட்டிக் கொண்டிருக்கிற வரையில், என்னுடைய உடல் மயானத்திற்குச் செல்கின்ற வரையில், என்னுடைய கடைசி மூச்சை நான் விடுகின்ற வரையில், திராவிட மக்களுக்காக, தமிழக மக்களுக்காக, தமிழ் மொழிக்காக நான் பாடுபடுவேன், பணியாற்றுவேன் (பலத்த கைதட்டல்) என்பதை மாத்திரம் இங்கே குழுமியிருக்கிற தாய்மார்களுக்கும், பெரியோர் களுக்கும், நண்பர்களுக்கும், என்னுடைய உடன் பிறப்புகளுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications