எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுமா ஹைகோர்ட்?
Recommended Video

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் என இன்றைய விசாரணையில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
முதல்வர் பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்பது திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு. இதனுடன் தகுதி நீக்கத்துக்கு எதிரான தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் வழக்கும் சேர்க்கப்பட்டுள்ளன.

இன்று விசாரணை
இந்த இரு வழக்குகள் மீதும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற உள்ளது. இந்த வழக்கின் விசாரணை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

என்ன உத்தரவு?
ஏற்கனவே இந்த வழக்கில் பெரும்பான்மையை நிரூபிக்க இன்று வரை இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகையால் இந்த தடை நீட்டிக்கப்படலாம் அல்லது பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்கிற உத்தரவு பிறப்பிக்கப்படலாம்.

தகுதி நீக்கத்துக்கு தடை?
அதேபோல் கர்நாடகாவின் எதியூரப்பா விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என தெரிவித்த காரணத்தாலேயே தகுதி நீக்கம் செய்ய முடியாது என்பதை மேற்கோள் காட்டி தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்துக்கு தடை விதிக்கலாம்.

நீதிமன்ற முடிவு இறுதி?
அத்துடன் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டு தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களையும் வாக்களிக்க அனுமதிக்கலாம். அதேநேரத்தில் இத விவகாரத்தில் நீதிமன்றத்தின் முடிவுதான் இறுதி எனவும் உத்தரவிட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications