மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க பிச்சை எடுக்கலாம், கூலி வேலை பார்க்கலாம்.. ஹைகோர்ட் அதிரடி!
மதுரை: மனைவி, குழந்தைகளுக்கு ஜீவனாம்சம் வழங்க ரோட்டில் போய் பிச்சை எடுக்கலாம். கூலி வேலை பார்த்து சம்பாதிக்கலாம். அந்தப் பொறுப்பிலிருந்து தப்பிக்க மட்டும் முயலக் கூடாது என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை அதிரடியாக கூறியுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர் செல்வராஜன். இவருக்கும் ரங்கசுபத்ரா என்பவருக்கும் திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது. இந்த நிலையி்ல கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர். குழந்தை தாயுடன் வளர்ந்து வருகிறLு.

இந்த நிலையில் கோவில்பட்டி குடும்பநீதிமன்றத்தில் சுபத்ரா ஒரு வழக்குப் போட்டார். அதில்,குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் தங்குவதற்கு வீடு, ஜீவனாம்சம், இழப்பீடு வழங்க உத்தரவிட அவர் கோரியிருந்தார். வழக்கை விசாரித்த கோர்ட், மாதம் ரூ. 10,000 ஜீவனாம்சம், வீட்டு வாடகைக்காக ரூ 10,000 மற்றும் ரூ. 50,000 இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. மேலும், சீர்வரிசை பொருட்களை திரும்ப வழங்கவும் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் செல்வராஜன். மனுவை விசாரித்த நீதிமன்றம், வீட்டு வாடகையாக 10 ஆயிரம் ரூபாய் வழங்க தேவையில்லை என்றும், ரூ.10 ஆயிரம் ஜீவனாம்சமும், 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடும் வழங்கினால் போதும் என்றும் உத்தரவிட்டது.
இதையும் எதிர்த்து செல்வராஜன் உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்தார். அதை விசாரித்த நீதிபதி தேவதாஸ் அதிரடி உத்தரவைப் பிறப்பித்தார். அவர் கூறுகையில்,இரு தரப்பினரின் வாதங்களையும் மிகுந்த கவலையோடு கேட்டேன். உடல் ரீதியான பாதிப்பை விட மன ரீதியான பாதிப்பு கொடுமையானது. சுபத்ராவுக்கு மனுதாரர் மன ரீதியான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளார். மனுதாரர் குடும்ப வன்முறையில் ஈடுபட்டிருப்பது தெரிகிறது. சட்டப்படி சுபத்ராவுக்கு மனுதாரர் சொத்தில் பங்கு கொடுக்க வேண்டும்.
மனுதாரர் என்ஜினீயரிங் படிப்பை முடித்துள்ளதாகவும், வேலை எதுவும் இல்லாமல் இருப்பதாகவும் கூறுகிறார். இதுபோன்ற வழக்குகளில் இருந்து தப்பிக்க வேலையில்லை என்று கூறுகின்றனர். இதை ஏற்க முடியாது.
மனுதாரர் கூலி வேலை கூட செய்யலாம். பிச்சை எடுத்தாவது மனைவி மற்றும் குழந்தைகளின் சாப்பாட்டுக்காக ஜீவனாம்சம் வழங்குவதில் தவறு கிடையாது என்று கூறி செல்வராஜனின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications