புகை மண்டலமான தென்காசி.. பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.. சிதறிய கட்டிடங்கள்
தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் ஆலையில் உள்ள கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் மைப்பாறை பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலையை சுற்றிலும் விவசாய நிலங்கள் உள்ளன. இதில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த பட்டாசு ஆலையில் வழக்கம்போல பணிகள் நடந்து வந்தது. 40 முதல் 50 ஊழியர்கள் இன்று இந்த பட்டாசு ஆலையில் பணிபுரிந்துள்ளனர். இந்த நிலையில் இன்று மதிய நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தினால், ஆலையில் உள்ள கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
நல்ல வேளையாக பட்டாசு ஆலையில் வேலை பார்த்து கொண்டிருந்தவர்கள் சாப்பிட சென்றிருந்தபோது இந்த விபத்து அரங்கேறியுள்ளது. விபத்து ஏற்பட்டதும் தொழிலாளர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். மேலும் உடனடியாக விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் ஊழியர்கள் விரைந்து வந்தனர்.
ஆனால் தீ விபத்தால் எழுந்த கரும்புகை காரணமாக தீயணைப்பு வீரர்களால் பட்டாசு ஆலைக்குள் செல்ல முடியவில்லை. எனினும் ஒரே ஒரு தீயணைப்பு வாகனம் மட்டும் உள்ளே சென்றுள்ளது. இதேபோல் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ பரவி அருகில் உள்ள வயல்களுக்கும் பரவியது. இதில், சுமார் 44 ஏக்கர் அளவில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம் பயிர்களில் தீ பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
தீ மளமளவென பரவியதால் அந்த பகுதி முழுவதுமே கரும்புகை சூழ்ந்தது. இதனால் தீ விபத்து பற்றி அறிந்ததும் அப்பகுதி மக்கள் அங்கே கூடினர். போலீசார் அவர்களை கிட்டே வரவிடாமல் தடுத்து வருகின்றனர். இதேபோல் ஊழியர்கள் யாரும் உள்ளே சிக்கியிருந்தால் அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க 5 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
சங்கரன்கோவில் எம்.எல்.ஏ ராஜா, சங்கரன்கோவில் கோட்டாட்சியர் கவிதா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரித்து வருகின்றனர். கரும்புகை அதிகமாக இருப்பதாலும், தீ மேலும் பரவி வருவதாலும் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
-
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?












Click it and Unblock the Notifications