புகை மண்டலமான தென்காசி.. பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.. சிதறிய கட்டிடங்கள்
தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் ஆலையில் உள்ள கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் மைப்பாறை பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலையை சுற்றிலும் விவசாய நிலங்கள் உள்ளன. இதில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த பட்டாசு ஆலையில் வழக்கம்போல பணிகள் நடந்து வந்தது. 40 முதல் 50 ஊழியர்கள் இன்று இந்த பட்டாசு ஆலையில் பணிபுரிந்துள்ளனர். இந்த நிலையில் இன்று மதிய நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தினால், ஆலையில் உள்ள கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
நல்ல வேளையாக பட்டாசு ஆலையில் வேலை பார்த்து கொண்டிருந்தவர்கள் சாப்பிட சென்றிருந்தபோது இந்த விபத்து அரங்கேறியுள்ளது. விபத்து ஏற்பட்டதும் தொழிலாளர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். மேலும் உடனடியாக விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் ஊழியர்கள் விரைந்து வந்தனர்.
ஆனால் தீ விபத்தால் எழுந்த கரும்புகை காரணமாக தீயணைப்பு வீரர்களால் பட்டாசு ஆலைக்குள் செல்ல முடியவில்லை. எனினும் ஒரே ஒரு தீயணைப்பு வாகனம் மட்டும் உள்ளே சென்றுள்ளது. இதேபோல் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ பரவி அருகில் உள்ள வயல்களுக்கும் பரவியது. இதில், சுமார் 44 ஏக்கர் அளவில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம் பயிர்களில் தீ பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
தீ மளமளவென பரவியதால் அந்த பகுதி முழுவதுமே கரும்புகை சூழ்ந்தது. இதனால் தீ விபத்து பற்றி அறிந்ததும் அப்பகுதி மக்கள் அங்கே கூடினர். போலீசார் அவர்களை கிட்டே வரவிடாமல் தடுத்து வருகின்றனர். இதேபோல் ஊழியர்கள் யாரும் உள்ளே சிக்கியிருந்தால் அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க 5 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
சங்கரன்கோவில் எம்.எல்.ஏ ராஜா, சங்கரன்கோவில் கோட்டாட்சியர் கவிதா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரித்து வருகின்றனர். கரும்புகை அதிகமாக இருப்பதாலும், தீ மேலும் பரவி வருவதாலும் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
ஆண்டவரையே திகைக்க வைத்த அறிவாலயம்.. கமல்ஹாசன் எடுத்த கடைசி அஸ்திரம்! மநீம கூட்டத்தில் முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications