''குல்பி ஐஸ்ல பாதாம் இல்லை''... வியாபாரியின் காதை கடித்து துப்பிய ஆட்டோ டிரைவர்!

Subscribe to Oneindia Tamil

Man arrested for biting Ice nan's ear
சென்னை: சிக்கன் 65ல, 65 துண்டு சிக்கன் இல்லனு ஒரு வடிவேலு காமெடி வருமே, அது மாதிரி, குல்பி ஐஸ்சில் பாதாம் இல்லை எனக் கூறி ஐஸ் வியாபாரியின் காதைக் கடித்துத் துப்பியிருக்கிறார் போதையில் இருந்த ஆட்டோ டிரைவர் ஒருவர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஐஸ் வியாபாரி பீமலேஷ். இவர் நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு, அயனாவரத்தில் குல்பி விற்றுள்ளார். அப்போது போர்சியஸ் சாலை அருகே, போதை ஆசாமி ஒருவர் பீமலேஷிடம் ஐஸ் வாங்கியுள்ளார்.

குல்பியை சாப்பிட ஆரம்பித்த போதை ஆசாமி, குல்பியில் பாதாம் இல்லை என தகராறு செய்துள்ளார். மேலும், பாதாம் இல்லாத குல்பிக்கு பணம் கொடுக்க முடியாது என மறுத்துள்ளார். இதனால், இருவருக்கும் வாக்குவதம் முற்றியுள்ளது. இதில், ஆத்திரமடைந்த போதை வாலிபர் திடீரென பீமலேஷின் வலது காதை கடித்து துப்பிவிட்டு ஓட்டம் பிடித்தார்.

அதனைத் தொடர்ந்து பீமலேஷ் கொடுத்த புகாரின் பேரில், அயனாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அயனாவரம் நாராயணன் தெருவை சேர்ந்த தினேஷ் (25) என்ற ஆட்டோ டிரை வரை கைது செய்துள்ளனர்.

பீமலேஷ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+