திருக்கோவிலூர் அருகே கள்ளக்காதலியின் மகனை கல்லால் அடித்து கொலை செய்து புதைத்து நபர் கைது
திருக்கோவிலூர் அருகே கள்ளக்காதலியின் மகனை கல்லால் அடித்து கொலை செய்து புதைத்து நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம்: திருக்கோவிலூர் அருகே கள்ள காதலியின் மகனை அடித்து கொலை செய்த பாலுசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.
திருக்கோவிலூரை அடுத்த எடையார் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பாலுசாமி. பெங்களூரில் பேக்கரி ஒன்றில் வேலை பார்த்த போது கணவரை இழந்த ரத்தினம்மாளுடன் நெருங்கி பழகியிருக்கிறார் பாலுசாமி.

ரத்தினம்மாளுக்கு அப்பு என்கிற ஆண் குழந்தை ஏற்கனவே இருக்கிறது. பாலுசாமி- ரத்தினம்மாளுக்கும் ஆண் மற்றும் பெண் குழந்தைகள் பிறந்திருக்கின்றன.
இந்நிலையில் அப்பு மீது வெறுப்பு கொண்ட பாலுசாமி அந்த சிறுவனை சொந்த ஊரான எடையாருக்கு அழைத்து வந்திருக்கிறார். சிறுவன் அப்புவை கல்லால் அடித்தே கொலை செய்து ஆற்றங்கரையோரம் புதைத்தும் உள்ளார்.
எடையாரில் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல சுற்றி வந்த பாலுசாமி, அப்புவை கொன்றுவிட்டதாகவும் கூறியிருக்கிறார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க பாலுசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications