குடும்பப் பிரச்சினை.. மனைவியை வெட்டிக் கொன்று... தலையுடன் சரணடைந்த கணவர்!
Subscribe to Oneindia Tamil
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே குடும்பப் பிரச்சினையில் மனைவியை கொன்றுவிட்டு தலையை வெட்டி எடுத்துக் கொண்டு போலீசில் சரணடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம், நெகமம் கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் சின்னப்பராஜ் தென்னை மரம் ஏறும் தொழிலாளி. இவரது மனைவி செல்வி.
இவர்கள் இருவரும் பொள்ளாச்சி அருகேயுள்ள புரவிபாளையத்திற்கு மரத்தில் ஏறி தேங்காய் பறிக்க வந்திருந்தனர். அங்கு மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவர் அவரைக் கண்டித்துள்ளார்.
இது சம்பந்தமாக நேற்று இரவு கணவன் மனைவிக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மனைவி செல்வியி்ன் தலையை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார் சின்னப்பராஜ்.
தலையை கையில் பிடித்தபடி சி்ன்னப்பராஜ், வடக்கிபாளையம் போலீஸ் ஸ்டேசனிற்கு நடந்து சென்று சரணடைந்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications