நாவரசு பாணியில் சம்பவம்.. துண்டு துண்டாக வெட்டப்பட்ட தலையில்லாத ஆண் சடலம்... சென்னையில் பரபரப்பு

துண்டு துண்டாக வெட்டப்பட்ட தலையில்லாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் முகப்பேர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை முகப்பேரில் கொலை செய்யப்பட்ட ஆண் சடலம் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கால்வாயில் வீசப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலையில்லாத காரணத்தினால் சடலத்தை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

முகப்பேர் மேற்கு பகுதி வழியாக செல்லும் மழைநீர் கால்வாயில் இருந்து கடுமையான தூர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.

man’s torso found inside gunny bag near Mogappair

இதனையடுத்து அங்கு சென்ற துப்புறவு பணியாளர்கள், அங்கு கிடந்த கோணிப்பையை இழுத்துச் சென்று குப்பைத் தொட்டியில் போட முயன்றுள்ளனர்.

அப்போது கோணிப்பையில் கட்டப்பட்டிருந்த கயிறு அறுந்து விழுந்த போது, பையிலிருந்து துண்டு துண்டாக வெட்டப்பட்ட ஆணின் உடல் பாகங்கள் கீழே விழுந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த துப்புரவு பணியாளர்கள், உடனடியாக காவல்துறையினர் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உடல் பாகங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உடல் பாகங்களில் தலை இல்லாத காரணத்தினால் அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கோணிப்பைக்குள் உடல் வெட்டப்பட்டு கிடந்த சம்பவம் முகப்பேரு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பல்கலை. முன்னாள் துணைவேந்தர் மகன் அண்ணாமலை பல்கலை மாணவர் நாவரசு ராக்கிங்கால் இப்படித்தான் கொல்லப்பட்டார். அது தமிழகத்தையே உலுக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+