கர கர முறுக்கு காரமான முறுக்கு மணப்பாறை முறுக்கு இப்போது ஆன்லைனில்...
வயிறு முட்ட சாப்பிட்டாலும், நொறுக்குத் தீனி இல்லாவிட்டால் பெரும்பாலோனோர் தவித்துப் போய்விடுவார்கள் நம் நாட்டில்இந்த நொறுக்குத் தீனிகளில் முதல் இடத்தைப் பிடித்திருப்பது முறுக்குதான். அப்படி பட்ட முறுக்கு என்ற உடனே மொரு மொருஎன்றும் அதன் மனமும் அனைவருக்கும் நினைவு வந்துவிடும், காரணம் முறுக்கு என்பது இந்திய மக்களின் ஒரு பாரம்பரியநொறுக்கு தீனி என்பதை யாராலும் மறுக்க இயலாது.
இத்தகைய சிறப்பை பெற்ற முறுக்கு பல ஊர்களில் பலவிதமாக தயாரிக்கப்பட்டாலும் திண்டுகல் மாவட்டத்தில் உள்ள மணப்பாறை முறுக்கு உலக அளவில் இன்றும் பிரபலமாக உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.
இவ்வளவு ருசி இந்த மணப்பாறை முறுக்கு மட்டும் எப்படி வந்தது என்று தெரியுமா? தெரிந்து கொள்ளுங்கள்.
மணப்பாறை முறுக்கின் ருசியின் ரகசியம்.
மணப்பாறையில் 1930ஆம் ஆண்டுகளில் இம் முறுக்கு தயாரிக்கும் தொழிலானது அறிமுகம் ஆனது. இன்றும் பல குடும்ப மக்கள்இதை பிரதான குடிசை தொழிலாக இங்கு செய்து வருகிறார்கள்.
இப்படி வந்த முறுக்கு அதிக ருசியாக இருப்பதன் காரணம் மணப்பாறை நீரின் உப்பு தன்மையே தான் என்றும் பலர் இந்த ஊரில்தெரிவிகிறார்கள். மணப்பாறை ஊரின் நீர் இயற்கையாக உப்பு தன்மையை கொண்ட ஊர், இந்த உப்பு தன்மையை கொண்ட நீர்கொண்டு இங்கு முறுக்கு தயாரிக்கப்படுவதால் இது மிகவும் ருசியாக இருப்பதாகவே பலர் நம்புகிறார்கள். இந்த ஊரில் மட்டும்முறுக்கை இரண்டு முறை எண்ணையில் பொறித்து எடுக்கிறார்கள் இதுவும் இதன் ருசிக்கு ஒரு காரணம்.
ஆனால் இந்த முறுக்கு தயாரிக்க இங்கு இதற்காக தனியாக அரிசி விளை வித்து அதை பயன்படுத்துகிறார்கள் அதன்காரணமாகவும் மணப்பாறை முறுக்கு ருசியாகவும் அதிக மணமாகவும் இருக்கிறது.
மணப்பாறையில் தயாராகும் முறுக்கு உலக அளவில் பல விதமான நாடுகளுக்கு தினமும் ஏற்றுமதி செய்வது இன்றளவும்நடக்கிறது.
மணப்பாறை முறுக்கு தயாரிக்கும் முறை :
தேவையான பொருட்கள்:
பச்சரிசி மாவு -1 கிலோ;
உளுத்தம்பருப்பு மாவு - சிறிதளவு
இரண்டையும் நன்கு கலந்து அத்துடன் ஜீரகம் , எள், பெருங்காயம் ஓமம், 10 கிராம் உப்பு இவற்றையும் சேர்த்து அத்துடன் தண்ணீரை கொஞ்சமாக விட்டுக் கலந்து, அத்துடன் கொஞ்சம் எண்ணெயும் சேர்த்துப் பிசைந்து வைத்து கொள்ள வேண்டும்.
இப்படி பிசைந்த மாவை சிறிது சிறிதாக எடுத்து முறுக்கு சுற்றும் அச்சில் வைத்து முறுக்கு போல் பிழிந்து அவற்றை சிறிது உலரவைக்க வேண்டும். இதை உலர்ந்த பின் எண்ணெயில் பொறித்து எடுத்து வைத்து கொள்ள வேண்டும். பின்னர் அடுத்த செட்டுமுறுக்குகளை போட்டு பொரித்து எடுக்க வேண்டும். பின் மீண்டும் முதலில் பொறித்த முறுக்குகளை போட்டு பொரித்து எடுக்கவேண்டும். இப்படியாக இரண்டிரண்டு தடவைகளாக பொறிக்கவேண்டும். பின்னர், காற்றுப் புகாத டப்பாக்களில் வைத்துடைட்டாக மூடிவிட வேண்டும். உங்களுக்கு வேண்டும் என்றால் வெண்ணெய் அல்லது நெய் சேர்க்கலாம்.
எவ்வளவுதான் நாம் பக்குவமாக செய்தாலும் மணப்பாறையில் ஊறும் தண்ணீரும் மணப்பாறையில் விளையும் அரிசிக்கும்மட்டும்தான் அந்த சுவையும் மணமும் வரும்.!
இப்படி சுவையான மணப்பாறை முறுக்கை தயாரித்து உங்கள் வீட்டிற்கே கொண்டு வந்து சேர்க்கிறது நேடிவ்கிருஷ்.காம்(www.nativcrush.com) இணையதளம். நீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்தாலே போதும் உங்கள் இல்லம் தேடி வரும் மணப்பாறைமுறுக்கு.
தமிழகத்தில் பலதரப்பட்ட ஊர்களில் சிறப்பு வாய்ந்த நொறுக்கு தீனிகளை ஒரே நேரத்தில் வாங்க முடியாமலும் அதன் பயனைஅடைய முடியாமலும் நம் மக்கள் அவசர கதியில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஓட்டத்தில் துரித உணவை உண்டு உடல்நலத்தை கெடுத்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் உடல் நலத்தை காக்கவும் நேரத்தை மிச்சபடுதவும் உங்கள் தேவையை எங்கள் சேவையாக கொண்டு வெவ்வேறுஊர்களின் சிறப்பு பெற்ற நொறுக்கு தீனிகள் இல்லம் தேடி வருகிறது. நாவில் சுவை தருகிறது. உங்கள் நேடிவ்க்ருஷ்.காம் (www.nativcrush.com)
ஒவ்வொரு ஊரில் ஒரு தின்பண்டம் சிறப்பு அவற்றை ஒரே இணையதளத்தில் மிக குறைவான விலையில் விற்கிறது நமதுநேடிவ்க்ருஷ்.காம். உங்களுக்கு பிடித்த மற்றும் ஆசை பட்டு உண்ண நினைத்த பல பிரபலமான தின்பண்டங்களை மிக எளிதாகஆன்லைனில் ஆர்டர் செய்து உங்கள் வீட்டிற்கே வந்து சேரும் தின்பண்டங்களை ருசித்து மகிழுங்கள் ..
நாம் நமது சொந்த ஊர்களை விட்டு இந்தியாவின் பல இடங்களில் வேலைக்காக மற்றும் படிக்கச் சென்றுள்ளோம். அங்குஎன்னதான் பல விதமான ஸ்நாக்ஸ் சாப்பிட்டு இருந்தாலும், நமது சொந்த ஊர் ஸ்நாக்ஸ்களுக்கு ஈடாகாது என்பதை உணர்ந்து,ஒவ்வொரு ஊரின் தனித்துவமான மற்றும் அனைத்து வகையான ஸ்நாக்ஸ்களையும் எல்லோரிடமும் கொண்டு சேர்க்கஉருவாக்கப்பட்டது தான் Nativcrush.com.